என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சிங்கப்பூரில் 13 வயது சிறுமியுடன் உடலுறவு - 3 இந்தியர்களுக்கு சிறை தண்டனை
Byமாலை மலர்21 Feb 2018 10:08 AM GMT (Updated: 21 Feb 2018 10:08 AM GMT)
சிங்கப்பூரில் 13 வயது சிறுமியுடன் உடலுறவு கொண்ட 3 இந்தியர்களுக்கு 15 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. #Indiansjailed #Singapore
சிங்கப்பூர்:
கடுமையான சட்டங்களை கொண்ட சிங்கப்பூர் நாட்டில் 14 வயதை அடையாத பெண்களுடன் உடலுறவு வைத்துக் கொள்வது தண்டனைக்குரிய குற்றமாக கருதப்படுகிறது. இந்த குற்றத்துக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், அபராதம் மற்றும் பிரம்படி கொடுக்கவும் சட்டத்தில் இடமுண்டு.
இந்நிலையில், கடந்த 2016-ம் ஆண்டு மே மாதம் இங்குள்ள லிட்டில் இந்தியா பகுதியில் தனது நண்பர்களுடன் சுற்றிகொண்டிருந்த 13 வயது சிறுமியை சந்தித்த 3 இந்தியர்கள் அவரது விருப்பத்துடன் உடலுறவில் ஈடுபட்டுள்ளனர்.
இதுதொடர்பாக, சிறுமியின் தாயார் போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் 14 வயதை அடையாத பெண்களுடன் உடலுறவு வைத்துக் கொண்ட குற்றச்சாட்டின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் குற்றவாளிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
இவ்வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி இந்தியாவை சேர்ந்த கில் குஜ்ரந்த் சிங்(25), சுர்ஜீத் சிங்(29) ஆகியோருக்கு தலா 15 மாத சிறை தண்டனையும், ஜுக்ராஜ் சிங்(33) என்பவருக்கு 8 மாத சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார். #tamilnews #Indiansjailed #Singapore
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X