search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மெக்சிகோவில் ஹெலிகாப்டர் விழுந்த விபத்தில் இருவர் பலி - மந்திரி உயிர் தப்பினார்
    X

    மெக்சிகோவில் ஹெலிகாப்டர் விழுந்த விபத்தில் இருவர் பலி - மந்திரி உயிர் தப்பினார்

    மெக்சிகோ நாட்டில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட மந்திரி சென்ற ஹெலிகாப்டர் தரையிறங்கும்போது கீழே விழுந்த விபத்தில் இருவர் உயிரிழந்தனர்.
    மெக்சிகோ சிட்டி:

    மெக்சிகோ நாட்டின் தலைநகரான மெக்சிகோ சிட்டி மற்றும் அருகாமையில் உள்ள சில மாவட்டங்களை நேற்று மாலை கடுமையான நிலநடுக்கம் தாக்கியது. ரிக்டர் அளவில் 7.2 அலகுகளாக பதிவான இந்த நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட ஒக்சாக்கா மாநிலத்துக்கு உட்பட்ட பகுதிகளை ஆய்வு செய்து, மீட்பு நடவடிக்கைகளை கண்காணிக்க அந்நாட்டின் உள்துறை மந்திரி நவரேட்டே, ஒக்சாக்கா மாநில கவர்னர் அலேஜான்ட்ரோ முரட் ஆகியோர் ஒரு ஹெலிகாப்டரில் சென்றனர்.

    அந்த ஹெலிகாப்டர் தரையிறங்கும்போது நிலை தடுமாறி கீழே விழுந்தது. இந்த விபத்தில் கீழே நின்றிருந்த இருவர் மீது ஹெலிகாப்டர் விழுந்ததில் அவர்கள் உடல் நசுங்கி உயிரிழந்தனர். உள்துறை மந்திரி, ஒக்சாக்கா கவர்னர் உள்ளிட்டோர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். #tamilnews

    Next Story
    ×