என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஹபீஸ் சயீத்தின் போதனை மையம், மருத்துவ மையங்களை கைப்பற்றியது பாகிஸ்தான் அரசு
Byமாலை மலர்14 Feb 2018 10:00 AM GMT (Updated: 14 Feb 2018 10:00 AM GMT)
மும்பை தாக்குதலில் தொடர்புடைய தீவிரவாதி ஹபீஸ் சயீத்தின் மத போதனை மையம் மற்றும் மருத்துவ மையங்களை பாகிஸ்தான் அரசு இன்று கைப்பற்றியுள்ளது. #Pakistan #Mumbaiattacks #HafizSaeed
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தானில் இருந்து செயல்படும் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் நிறுவனரும் ஜமாத் உத் தவா அமைப்பின் தலைவருமான ஹபீஸ் சயீத்தை தேடப்படும் குற்றவாளியாக ஐ.நா. அறிவித்தது. லஷ்கர் இ தொய்பா, ஜமாத் உத் தவா மற்றும் ஹர்கட்-உல் முஜாஹிதீன் உள்ளிட்ட அமைப்புகளுக்கு தீவிரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் ஐ.நா. தடை விதித்துள்ளது.
ஐ.நா. பட்டியலில் மொத்தம் 27 தடை செய்யப்பட்ட தீவிரவாத அமைப்புகள் உள்ளன. ஹபீஸ் சயீதை தீவிரவாதியாக அறிவிக்க அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வந்தன.
இதையடுத்து, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தடை செய்துள்ள தனி நபர்கள், தீவிரவாத அமைப்புகளை தடை செய்ய வகை செய்யும் அவசர சட்டத்திற்கு பாகிஸ்தான் ஜனாதிபதி மம்னூன் உசைன் சமீபத்தில் ஒப்புதல் அளித்து கையொப்பமிட்டார். ஹபீஸ் சயீத்தை தீவிரவாதியாக அறிவித்து சட்டம் கொண்டுவரப்பட்டிருப்பதாக பாகிஸ்தானின் தேசிய தீவிரவாத எதிர்ப்பு ஆணையமும் உறுதி செய்துள்ளது.
இந்நிலையில், மும்பை தாக்குதலில் தொடர்புடைய தீவிரவாதி ஹபீஸ் சயீத்தின் மத போதனை மையம் மற்றும் மருத்துவ மையங்களை பாகிஸ்தான் அரசு இன்று கைப்பற்றியது.
இதுதொடர்பாக அதிகாரிகள் கூறுகையில், ‘தீவிரவாதி ஹபீஸ் சயீத்தின் மத போதனை மையம் மற்றும் மருத்துவ மையங்கள் ராவல்பிண்டி மாகாண நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டன. இவற்றை அப்பகுதி மக்களுக்கு பயன்படும் விதமாக பயன்படுத்தி கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டது.
மேலும், அங்கு பயின்று வரும் மாணவர்கள், ஆசிரியர்கள் குறித்த விவரங்கள் மற்றும் மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள் குறித்த விவரங்களையும் பதிவு செய்யும்படி வலியுறுத்தப்பட்டு உள்ளது’ என தெரிவித்துள்ளனர். #Pakistan #Mumbaiattacks #HafizSaeed #tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X