என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கேபிள் இல்லாமல் காந்த சக்தி மூலம் இயங்கும் லிப்ட் - விரைவில் நடைமுறைக்கு வரும் என தகவல்
Byமாலை மலர்21 Dec 2017 8:00 AM GMT (Updated: 21 Dec 2017 8:00 AM GMT)
கேபிள் ஏதும் இல்லாமல் காந்த சக்தி மூலம் இயங்கும் லிப்ட் விரைவில் நடைமுறைக்கு வரும் என ஜெர்மனி நிறுவனம் தெரிவித்துள்ளது.
பெர்லின்:
ஜெர்மனியில் உள்ள உலகின் மிகப்பெரிய லிப்ட் தயாரிப்பு நிறுவனமானது புதிய முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. பொதுவாக லிப்ட் ஆனது கேபிள்கள் மூலம் இணைக்கப்பட்டிருக்கும். ஆனால் கேபிள் ஏதும் இல்லாமல் காந்த சக்தி மூலம் இயக்கும் லிப்டை இந்த நிறுவனம் உருவாக்கி வருகிறது.
இந்த லிப்டானது காந்த சக்தி மூலம் சுவரில் பொருத்தப்பட்டிருக்கும். இது மேலே, கீழே மற்றும் பக்கவாட்டில் நகரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனோடு பொருத்தப்பட்டிருக்கும் மோட்டார் பக்கவாட்டில் திரும்பி லிப்டை நகர்த்தி கொண்டு செல்லும். இதன் மூலம் ஒரு கட்டிடத்திலிருந்து அதனை ஒட்டியுள்ள மற்றொரு கட்டிடத்திற்கும் செல்ல முடியும்.
புதியதாக வடிவமைக்கப்பட்ட இந்த லிப்ட் மக்களுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும். ஒரே நேரத்தில் எத்தனை லிப்ட்களை வேண்டுமானாலும் இந்த காந்த வழித்தடத்தில் இயக்க முடியும். இதன் மூலம் கட்டிடங்களில் லிப்ட்க்கான இடத்தை வடிவமைப்பதை எளிதாக்க முடியும். ஆனால் இதன் விலை மிகவும் அதிகமாகும். 2020 ஆம் ஆண்டில் பெர்லினில் உள்ள கட்டிடத்தில் இந்த லிப்ட் பரீட்சார்த்த முறையில் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதில் பயணம் செய்வது சாதாரண லிப்டில் பயணம் செய்வது போல் இருக்கும். பயப்பட தேவையில்லை என்றும் அந்த நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
ஜெர்மனியில் உள்ள உலகின் மிகப்பெரிய லிப்ட் தயாரிப்பு நிறுவனமானது புதிய முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. பொதுவாக லிப்ட் ஆனது கேபிள்கள் மூலம் இணைக்கப்பட்டிருக்கும். ஆனால் கேபிள் ஏதும் இல்லாமல் காந்த சக்தி மூலம் இயக்கும் லிப்டை இந்த நிறுவனம் உருவாக்கி வருகிறது.
இந்த லிப்டானது காந்த சக்தி மூலம் சுவரில் பொருத்தப்பட்டிருக்கும். இது மேலே, கீழே மற்றும் பக்கவாட்டில் நகரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனோடு பொருத்தப்பட்டிருக்கும் மோட்டார் பக்கவாட்டில் திரும்பி லிப்டை நகர்த்தி கொண்டு செல்லும். இதன் மூலம் ஒரு கட்டிடத்திலிருந்து அதனை ஒட்டியுள்ள மற்றொரு கட்டிடத்திற்கும் செல்ல முடியும்.
புதியதாக வடிவமைக்கப்பட்ட இந்த லிப்ட் மக்களுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும். ஒரே நேரத்தில் எத்தனை லிப்ட்களை வேண்டுமானாலும் இந்த காந்த வழித்தடத்தில் இயக்க முடியும். இதன் மூலம் கட்டிடங்களில் லிப்ட்க்கான இடத்தை வடிவமைப்பதை எளிதாக்க முடியும். ஆனால் இதன் விலை மிகவும் அதிகமாகும். 2020 ஆம் ஆண்டில் பெர்லினில் உள்ள கட்டிடத்தில் இந்த லிப்ட் பரீட்சார்த்த முறையில் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதில் பயணம் செய்வது சாதாரண லிப்டில் பயணம் செய்வது போல் இருக்கும். பயப்பட தேவையில்லை என்றும் அந்த நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X