என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
போர் மூளும் சூழ்நிலை ஏற்பட்டால் வடகொரியாவை முழுவதும் அழித்து விடுவோம்: அமெரிக்கா எச்சரிக்கை
Byமாலை மலர்30 Nov 2017 12:45 AM GMT (Updated: 30 Nov 2017 12:46 AM GMT)
பதற்றமான சூழ்நிலையில், போர் மூளும் சூழ்நிலை ஏற்பட்டால் வடகொரியாவை முழுவதும் அழித்து விடுவோம் என அமெரிக்க அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
வாஷிங்டன்:
பதற்றமான சூழ்நிலையில், போர் மூளும் சூழ்நிலை ஏற்பட்டால் வடகொரியாவை முழுவதும் அழித்து விடுவோம் என அமெரிக்க அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
வடகொரியா தொடர்ந்து ஏவுகணைகள் மற்றும் அணு ஆயுத சோதனைகள் நடத்தி வருகிறது. இதற்கு அமெரிக்கா, தென் கொரியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளும், ஐ.நா.வும் கண்டனம் தெரிவித்துள்ளன.
சமீபத்தில் கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து சென்று தாக்கும் திறன் படைத்த ஏவுகணை சோதனை நடத்தியது. அதை தொடர்ந்து வடகொரியாவுக்கு அமெரிக்கா பொருளாதார தடை விதித்தது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே பிரச்சினை வெடித்தது.
இதைதொடர்ந்து அமைதியாக இருந்த வடகொரியா 2 மாதங்களுக்கு பிறகு நேற்று மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தியது. இது ஜப்பானின் கடல் பொருளாதார மண்டல பகுதியில் அதாவது கடலில் விழுந்தது. இத்தகவலை தென் கொரியா தெரிவித்தது. அதை அமெரிக்காவின் ராணுவ தலைமையகமான பென்டகன் உறுதி செய்துள்ளது.
கண்டம் விட்டு கண்டம் பாயும் இந்த ஏவுகணை அமெரிக்கா முழுவதையும் தாக்கி அழிக்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.
வடகொரியாவின் ஏவுகணை சோதனைக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப், ஜப்பான் பிரதமர் ஷின்கோ அபே மற்றும் ஐ.நா. சபை பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்ரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதர் நிக்கி ஹலே கூறுகையில், அனைத்து நாடுகளும் வட கொரியாவுடனான வர்த்தகம் உள்ளிட்ட அனைத்து தொடர்புகளையும் துண்டிக்க வேண்டும். பதற்றமான சூழ்நிலையில் போர் மூண்டால் வட கொரியாவை முழுவதும் அழித்து விடுவோம் என எச்சரிக்கை விடுத்துள்ளதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
பதற்றமான சூழ்நிலையில், போர் மூளும் சூழ்நிலை ஏற்பட்டால் வடகொரியாவை முழுவதும் அழித்து விடுவோம் என அமெரிக்க அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
வடகொரியா தொடர்ந்து ஏவுகணைகள் மற்றும் அணு ஆயுத சோதனைகள் நடத்தி வருகிறது. இதற்கு அமெரிக்கா, தென் கொரியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளும், ஐ.நா.வும் கண்டனம் தெரிவித்துள்ளன.
சமீபத்தில் கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து சென்று தாக்கும் திறன் படைத்த ஏவுகணை சோதனை நடத்தியது. அதை தொடர்ந்து வடகொரியாவுக்கு அமெரிக்கா பொருளாதார தடை விதித்தது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே பிரச்சினை வெடித்தது.
இதைதொடர்ந்து அமைதியாக இருந்த வடகொரியா 2 மாதங்களுக்கு பிறகு நேற்று மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தியது. இது ஜப்பானின் கடல் பொருளாதார மண்டல பகுதியில் அதாவது கடலில் விழுந்தது. இத்தகவலை தென் கொரியா தெரிவித்தது. அதை அமெரிக்காவின் ராணுவ தலைமையகமான பென்டகன் உறுதி செய்துள்ளது.
கண்டம் விட்டு கண்டம் பாயும் இந்த ஏவுகணை அமெரிக்கா முழுவதையும் தாக்கி அழிக்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.
வடகொரியாவின் ஏவுகணை சோதனைக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப், ஜப்பான் பிரதமர் ஷின்கோ அபே மற்றும் ஐ.நா. சபை பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்ரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதர் நிக்கி ஹலே கூறுகையில், அனைத்து நாடுகளும் வட கொரியாவுடனான வர்த்தகம் உள்ளிட்ட அனைத்து தொடர்புகளையும் துண்டிக்க வேண்டும். பதற்றமான சூழ்நிலையில் போர் மூண்டால் வட கொரியாவை முழுவதும் அழித்து விடுவோம் என எச்சரிக்கை விடுத்துள்ளதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X