search icon
என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • கமல்ஹாசன் இரட்டை வேடத்தில் நடித்த 'இந்தியன்' திரைப்படம் 28 ஆண்டுகளுக்கு முன் வெளியாகி வெற்றி பெற்றது
    • இப்படத்தை லைக்கா மற்றும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்து தயாரித்தன

    பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் 1996 -ல் நடிகர் கமல்ஹாசன் இரட்டை வேடத்தில் நடித்த 'இந்தியன்' திரைப்படம் 28 ஆண்டுகளுக்கு முன் வெளியாகி வெற்றி பெற்றது. மேலும் ரசிகர்களிடம் இப்படம் பெரும் வரவேற்பு பெற்று வசூல் சாதனை படைத்தது.

    இந்நிலையில் இந்தியன்- 2 படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்தது. இதைத்தொடர்ந்து இயக்குநர் ஷங்கர் 'இந்தியன் - 2' படத்தில் கமலை மீண்டும் கதாநாயகனாக இயக்க தொடங்கினார்.

    இப்படத்தை லைக்கா மற்றும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்து தயாரித்தன.

    இதில் காஜல் அகர்வால், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா, டெல்லி கணேஷ், ஜெயபிரகாஷ், குரு சோமசுந்தரம், வெண்ணிலா கிஷோர், ஜார்ஜ் மரியான், உள்ளிட்ட பலர் நடித்தனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

    இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதி கட்டப்பணிகள் நடந்து வருகின்றன.

    இந்நிலையில், நடிகர் சித்தார்த் பிறந்தநாளை ஒட்டி இன்று அவரது சிறப்பு போஸ்டரை இந்தியன் 2 படக்குழு வெளியிட்டுள்ளது. 

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • ஏ.ஐ. சார்ந்த பல்வேறு அம்சங்கள் வழங்கப்பட்டு உள்ளன.
    • டி.வி. மாடலுக்கு ஏற்ப 20 சதவீதம் வரை கேஷ்பேக் வழங்கப்படுகிறது.

    சாம்சங் இந்தியா நிறுவனம் நியோ QLED 8K மற்றும் புதிய QLED 4K டி.வி. மாடல்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய சாம்சங் டி.வி.க்களில் ஏ.ஐ. சார்ந்த அம்சங்கள் மூலம் காட்சி மற்றும் ஒலியின் தரம் மேம்படுத்தப்படுகிறது. இத்துடன் ஏ.ஐ. சார்ந்த பிரத்யேக கேமிங் மோட், பவர் சேவிங் மோட் வழங்கப்படுகிறது.

    புதிய சாம்சங் நியோ QLED 8K டி.வி. QN900D மற்றும் QN800D மாடல்கள் 65-இன்ச், 75-இன்ச் மற்றும் 85-இன்ச் அளவுகளில் கிடைக்கிறது. இவற்றில் NQ8 ஏ.ஐ. ஜென் 3 பிராசஸர் மற்றும் பில்ட்-இன் NPU ஏ.ஐ. சார்ந்த பல்வேறு அம்சங்கள் வழங்கப்பட்டு உள்ளன.

    புதிய சாம்சங் நியோ QLED 8K டிவி துவக்க விலை ரூ. 3 லட்சத்து 19 ஆயிரத்து 990 என்றும் நியோ QLED 4K டி.வி. விலை ரூ. 1 லட்சத்து 39 ஆயிரத்து 990 என்றும் சாம்சங் OLED டி.வி. விலை ரூ. 1 லட்சத்து 64 ஆயிரத்து 990 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    குறுகிய கால சலுகையாக ஏப்ரல் 30 ஆம் தேதி வரை வாடிக்கையாளர்கள் தேர்வு செய்யும் டி.வி. மாடலுக்கு ஏற்ற வகையில், ரூ. 79 ஆயிரத்து 990 மதிப்புள்ள சவுண்ட்பார், ரூ. 59 ஆயிரத்து 990 மதிப்புள்ள ஃபிரீ ஸ்டைல் ப்ரோஜெக்டர், ரூ. 29 ஆயிரத்து 990 மதிப்புள்ள மியூசிக் ஃபிரேம் உள்ளிட்டவை இலவசமாக வழங்கப்படுகிறது. இத்துடன் டி.வி. மாடலுக்கு ஏற்ப 20 சதவீதம் வரை கேஷ்பேக் வழங்கப்படுகிறது.

    • மேற்கு வங்காள கவர்னர் ஆனந்த போஸ் கூச்பெஹர் பகுதிக்குச் செல்ல திட்டமிட்டுள்ளார்.
    • தேர்தல் நன்னடத்தை விதிகளை மீறவேண்டாம் என தேர்தல் ஆணையம் அவருக்கு அறிவுறுத்தியது.

    கொல்கத்தா:

    பாராளுமன்ற தேர்தல் 7 கட்டமாக நடைபெற உள்ளது. முதல் கட்ட தேர்தல் நாளை மறுதினம் நடைபெற உள்ள நிலையில், இன்று மாலை 6 மணியுடன் தேர்தல் பிரசாரம் நிறைவடைந்தது.

    மொத்தம் 21 மாநிலங்களில் உள்ள 102 தொகுதிகளுக்கு நடைபெற உள்ள முதல் கட்ட தேர்தலில் மேற்கு வங்காளத்தில் 3 தொகுதியில் தேர்தல் நடைபெறுகிறது. அங்கு தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலில் உள்ளன.

    இதற்கிடையே, மேற்கு வங்காள கவர்னர் ஆனந்த போஸ் நாளை கூச் பெஹர் பகுதிக்கு செல்ல திட்டமிட்டுள்ளார். கவர்னரின் இந்தப் பயணம் தேர்தல் ஆணையத்தின் கவனத்திற்கு சென்றது.

    இந்நிலையில், முதல் கட்ட தேர்தல் நடைபெற உள்ள மேற்கு வங்காள மாநிலம் முழுவதும் தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலில் உள்ளது. நன்னடத்தை விதிகள் அரசியல் கட்சியினர், அரசு அதிகாரிகளுக்கு மட்டுமல்ல, கவர்னருக்கும் பொருந்தும் என்பதால் கவர்னர் இதனை மீறக்கூடாது என தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

    • எங்களுடைய நோக்கம் நீட் தேர்வு மூலமாக தான் ஏழை மாணவர்கள் அரசு மருத்துவக்கல்லூரிக்கு செல்ல வேண்டும்
    • நீட் தேர்வை ரத்து செய்து விட்டு தான் நாங்கள் அரசியல் செய்ய வேண்டும் என்றால் அப்படி பட்ட அரசியலே எங்களுக்கு வேண்டாம்

    கோவை தொகுதியில் சுல்தான்பேட்டை ஒன்றிய பகுதியில், பாஜக வேட்பாளர் அண்ணாமலை தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.

    சின்னவதம்பசேரி கிராமத்தில் ஓட்டு சேகரித்த அவரிடம் பெண் ஒருவர் நீட் தேர்வு மூலம் ஏராளமான குழந்தைகள் இறக்கின்றனர். அப்படி இருக்க ஏன் அதனை கட்டாயப்படுத்துகிறீர்கள்? என்று கேள்வி எழுப்பினார்.

    அதற்கு பதில் அளித்த அண்ணாமலை, "உயிரே போனாலும் நீட் தேர்வை ரத்து செய்ய மாட்டோம். நீட் ஏழை மக்களுக்கு நல்லது. முதன் முறையாக ஏழை மாணவர்கள் நீட் மூலமாக தான் அரசு மருத்துவமனைக்கு படிக்க செல்கின்றனர். திமுக 1967-ல் ஆட்சிக்கு வந்த பிறகு தமிழ்நாட்டில் கொண்டு வந்தது 5 அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் 17 அரசு மருத்துவக்கல்லூரி தான். ஆனால் நாங்கள் 15 அரசு மருத்துவக்கல்லூரி கொண்டு வந்துள்ளோம்.

    எங்களுடைய நோக்கம் நீட் தேர்வு மூலமாக தான் ஏழை மாணவர்கள் அரசு மருத்துவக்கல்லூரிக்கு செல்ல வேண்டும். உயிரே போனாலும் நீட் தேர்வை ரத்து செய்ய மாட்டோம். நீட் தேர்வை ரத்து செய்து விட்டு தான் நாங்கள் அரசியல் செய்ய வேண்டும் என்றால் அப்படி பட்ட அரசியலே எங்களுக்கு வேண்டாம்.

    கிராமப்புறத்தில் ஒரு ஒரு ஏழை மாணவன் நீட் தேர்வினால் மட்டும் தான் அரசு மருத்துவக்கல்லூரிக்கு படிக்க செல்ல வேண்டும். இல்லையென்றால் ஏழைமாணவர்கள் லட்சக்கணக்கில் பணம் கட்டி தனியார் மருத்துவ கல்லூரிகளில் தான் படிக்க முடியும்.

    நீட் தேர்வினால் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளவில்லை. அவர்களை தற்கொலை செய்து கொள்ள தூண்டுகிறார்கள். மாணவர்கள் யாரேனும் தற்கொலை செய்தால் முதல்வர் ஸ்டாலின் மீது வழக்குப் போட்டு உள்ளே தள்ளுங்கள். அதற்கு மேல் எந்த மாணவரும் தற்கொலை செய்து கொள்ள மாட்டார்கள்" என்று அவர் தெரிவித்தார்.

    • குஜராத் அணி மூன்று போட்டிகளில் தோல்வியுற்றது.
    • டெல்லி அணி புள்ளி பட்டியலில் பின்தங்கியுள்ளது.

    ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரின் 32 ஆவது போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதுகின்றன.

    இன்றைய போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. குஜராத் டைட்டன்ஸ் அணி இதுவரை விளையாடிய ஆறு போட்டிகளில் மூன்று வெற்றி, மூன்று தோல்விகளை சந்தித்துள்ளது.

    டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி ஆறு போட்டிகளில் இரண்டு வெற்றி, மூன்று தோல்விகளை சந்தித்துள்ளது. இரு அணிகளும் புள்ளிகள் பட்டியலில் பின்தங்கியுள்ள நிலையில், இன்றைய போட்டியில் வெற்றி பெறும் முனைப்பில் களமிறங்குகின்றன.

    • இந்த படத்தில் ஆன்ட்ரியா ஜெர்மியா நடித்துள்ளார்.
    • இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.

    தமிழ் சினிமாவில் அறம் படம் மூலம் அறிமுகமானவர் இயக்குநர் கோபி நயினார். இவர் இயக்கிய அறம் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் நயன்தாரா முதன்மை பாத்திரத்தில் நடித்திருந்தார்.

    இயக்குநர் கோபி நயினாரின் அடுத்த படம் "மனுசி" என்ற தலைப்பில் உருவாகி இருக்கிறது. இந்த படத்தை வெற்றி மாறன் தயாரித்துள்ளார். இயக்குநரின் முதல் படத்தை போன்றே இந்த படமும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதையை கொண்டிருக்கிறது. இதில் ஆன்ட்ரியா ஜெர்மியா நடித்துள்ளார்.

    இளையராஜா இசையமைத்துள்ள மனுசி படத்தின் டிரைலரை நடிகர் விஜய் சேதுபதி தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார். இந்த படம் தொடர்பான அடுத்தடுத்த தகவல்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்று தெரிகிறது.

    இப்படத்தில் நடிகர் நாசர், தமிழ் மற்றும் ஹக்கிம் ஷா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அறம் படத்தை போன்றே இப்படமும் சமூக பிரச்சினைகளை பேசும் கதைக்களம் கொண்டிருக்கும் என்பது டிரைலரில் தெரியவந்துள்ளது. 



    • ஆண்டுக்கு 2 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கொடுக்கப்படும் என ஆட்சிக்கு வந்து,
    • 10 ஆண்டுகளில் 20 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கொடுத்தாரா?.

    தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் இன்று சென்னை பெசன்ட் நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மத்திய சென்னை திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் மற்றும் தென்சென்னை வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோரை ஆதரித்து வாக்கு சேகரித்து பேசினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    கடந்த 22 நாட்களாக தமிழ்நாடு முழுவதும் சுற்றுப் பயணம் செய்து மக்களை சந்தித்துள்ளேன். மக்களுடைய முகத்தில் தெரியும் மகிழ்ச்சி மற்றும் எழுச்சியை வைத்து 40-க்கும் 40-ஐ நாம்தான் வெல்லப் போகிறோம் என்பதை சொல்கிறேன். 40-ஐயும் நமது கூட்டணிதான் ஆளப்போகிறது.

    தமிழ்நாட்டில் மட்டும் அல்ல. வட மாநிலங்களிலும் இந்தியா கூட்டணிக்கான ஆதரவு அலை வீசிக் கொண்டிருக்கிறது. இதற்கு காரணம் பிரதமர் மோடியின் சர்வாதிகர மனப்பான்மை. மாநிலங்களை நசுக்கிற எதேச்சதிகாரம். ஒற்றுமையாக வாழுகின்ற மக்களிடையே பிளவை உருவாக்குகின்றன மதவாத பேச்சு. எதிர்க்கட்சிகளை ஒடுக்க நினைக்கின்ற பாசிச எண்ணம்.

    ஹேமந்த் சோரன், அரவிந்த் ஜெக்ரிவாலை சிறையில் அடைத்துள்ளார். தேர்தல் களம் சமமாக இருந்தால் தோல்வி நிச்சயம் என்பதை உணர்ந்து காங்கிரஸ், கம்யூனிஸ்ட் வங்கி கணக்குகளை முடக்கும் தீய செயல்களில் ஈடுபட்டார்.

    மக்களை பற்றி சிந்திக்காமல் கார்ப்பரேட்டர்கள் மட்டுமே முன்னேற வேண்டும் என சிந்தித்து திட்டங்களை தீட்டியதில் விலைவாசி உயர்ந்து, அத்தியாவசிய பொருட்களின் விலை விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்து நிற்கிறது.

    ஆண்டுக்கு 2 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கொடுக்கப்படும் என ஆட்சிக்கு வந்து, 10 ஆண்டுகளில் 20 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கொடுத்தாரா?. இல்லை. கேள்வி கேட்ட இளைஞர்களை பகோடா சுடச் சொன்னவர்தான் மோடி.

    தற்போது நடுநிலை வாக்காளர்களும் பாஜக-வின் உண்மையான முகத்தை தெரிந்து கொண்டு வெறுக்க தொடங்கிவிட்டார்கள்.

    ஊழல் பத்திரம் மோடியின் க்ளீன் முகத்தை கிழித்து மோடியின் ஊழல் முகத்தை வெளிச்சம் போட்டு காட்டிவிட்டது. உடனே தனது இமேஜை காப்பாற்றிக் கொள்ள தேர்தல் பத்திரம் வந்த உடன்தான் யார்? யாருக்கு? நிதி அளித்தார்கள் என்பது தெரியவந்தது என வடை சுட ஆரம்பித்தார்.

    நாடு எத்தனையோ பிரதமரை பார்த்திருக்கிறது. இதுபோன்று வசூல் வேட்டையில் ஈடுபட்ட பிரதமரை பார்த்தது இல்லை. கொரோனாவில் கூட பிரதமர் கேர் நிதி வசூல் வேட்டை நடத்தினார். ஊழலுக்கு ஒரு யுனிவர்சிட்டி கட்டி அதற்கு ஒருவரை வேந்தராக நியமிக்க வேண்டுமென்றால் அதற்கு பொருத்தமான நபர் மோடியை விட்டால் வேறு யாரும் கிடையாது. ஊழலை சட்டப்பூர்வமாக்கிய சாதனையாளர் மோடிதான்.

    இப்போது ஊழலுக்கு உத்தரவாதம் கொடுக்கிற Made in BJP. வாஷிங் மெஷின் வைத்து ஊழல் கறை படிந்ததை சுத்தப்படித்தியிருக்கிறார்கள். இது தொடர்பாக கேள்விமேல் கேள்வி கேட்கிறார்களே. நடுநிலையாளர்கள் கேள்வி கேட்கிறார்களே என்ற எந்தவிதமான மான உணர்ச்சி இல்லாமல் திரும்ப திரும்ப அதே செயல்களில் பாஜக ஈடுபடுகிறது.

    பா.ஜனதா ஒரு மாநிலத்தில் வளர்ச்சி அடைய தேடுவது மத பிரச்சனையைத்தான். அங்கு பிரச்சனை இல்லையென்றால் எப்படி தூண்டலாம் என ரூம் போட்டு யோசிக்கின்ற கலவர கட்சிதான் பாஜக.

    பாஜனதா குறித்து பேசினால் நம்மை ஊழல் கட்சி, குடும்ப கட்சி எனக் குறை கூறுகிறார்கள். தேய்ந்து போன டேப் ரெக்கார்டு மாதிரி மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள். இதற்கு பதில் அளித்தே சோர்ந்து போனோம்.

    நிறையபேர் தனியாக இருந்து இரவு 12 மணிக்குக்கூட பேய் படும் பார்த்து விடுவார்கள். ஆனால் மோடி இரவு டி.வி.யில் பேசப்போகிறார் என்றால், பலரின் நெஞ்சு படபடத்துவிடும். அந்த அளவிற்கு நாட்டு மக்களை மன ரீதியான அளவிற்கு பயத்திற்கு ஆளாக்கியிருப்பவர்தான் பிரதமர் மோடி.

    திடீரென ஒருநாள் டி.வி.யில் வந்தார். 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது எனக் கூறினார். எந்தவிதமான திட்டமிடுதல் இல்லாமல் ஒரு திட்டத்தை கொண்டு வந்து, அதன்பின் தினந்தோறும் விதி (Rule) போட்டார். கேட்டால், கருப்பு பணத்தை ஒழிக்கிறேன் என வசனம் பேசினார். மக்களும் அதை நம்பி சொன்னதையெல்லாம் செய்தார்கள்.

    கருப்பு பணம் ஒழிந்ததா? 99 சதவீத பணம் திரும்பி வந்ததாக ரிசர்வ் வங்கி சொன்னது. முதலில் ஆதரிவித்தவர்கள் பின்னர் கடுமையாக விமர்சித்தார்கள். அதோடு விடாமல் புதிதாக அறிவித்த 2 ஆயிரம் ரூபாய் நோட்டு செல்லாது என அறிவித்தார். அந்த பணமும் 97 சதவீதம் திரும்பி வந்துள்ளது. அப்போ கருப்பு பணம் ஒழிப்பு என்ன மோடி மஸ்தான் வித்தை எதற்கு? பண மதிப்பிழப்பு நடவடிக்கைதான் ஏழை மீதான முதல் தாக்குதல்.

    இவ்வாறு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விமர்சனம் செய்தார்.

    • பிரசாரம் நிறைவடைந்த பின் தேர்தல் தொடர்பான பொதுக்கூட்டம், ஊர்வலம் நடத்தக்கூடாது
    • தொலைக்காட்சி, ரேடியோ, சமூக வலைத்தளங்களில் தேர்தல் பிரசாரம் செய்யக்கூடாது என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது

    தமிழ்நாட்டில் பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்குகிறது. தேர்தல் முடிவுகள் ஜூன் 4-ம் தேதி வெளியாகிறது.

    தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளிலும் இன்று மாலை 6 மணியுடன் பிரசாரம் நிறைவடைந்தது. தேர்தலை முன்னிட்டு பாதுகாப்புப் பணிகளில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

    சென்னையில் மு.க.ஸ்டாலினும், சேலத்தில் எடப்பாடி பழனிசாமியும், தர்மபுரியும் அன்புமணியும், கோவையில் அண்ணாமலையும் இன்றைய நாளில் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

    பிரசாரம் நிறைவடைந்த பின் தேர்தல் தொடர்பான பொதுக்கூட்டம், ஊர்வலம் நடத்தக்கூடாது. தொலைக்காட்சி, ரேடியோ, சமூக வலைத்தளங்களில் தேர்தல் பிரசாரம் செய்யக்கூடாது என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

    தேர்தல் விதிகளை மீறினால் 2 ஆண்டு சிறை, அபராதம் விதிக்கப்படும் என தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கும் பாராளுமன்ற தேர்தல் ஜூன் 1-ம் தேதி முடிவடைகிறது.
    • முதல் கட்டமாக மொத்தம் 21 மாநிலங்களில் உள்ள 102 தொகுதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தல் 7 கட்டமாக நடைபெறவுள்ளது. ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கும் தேர்தலானது ஜூன் 1-ம் தேதி முடிவடைகிறது.

    தமிழ்நாடு, அசாம், பீகார், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், உத்தரகண்ட் ஆகிய மாநிலங்களில் முதல் கட்டத் தேர்தல் நாளை மறுநாள் நடைபெறவுள்ளது.

    தமிழகத்தில் 39 தொகுதி, உத்தர பிரதேசத்தில் 8 தொகுதி, மத்திய பிரதேசத்தில் 6 தொகுதி, மகாராஷ்டிரா மற்றும் உத்தரகாண்டில் தலா 5 தொகுதிகள் உள்பட மொத்தம் 21 மாநிலங்களில் உள்ள 102 தொகுதிகள் தேர்தல் நடைபெற உள்ளது.

    இந்நிலையில், முதல் கட்ட தேர்தல் நடைபெறும் 21 மாநிலங்களில் இன்று மாலை 6 மணியுடன் பிரசாரம் நிறைவடைந்தது. தேர்தலை முன்னிட்டு பாதுகாப்புப் பணிகளில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

    பிரசாரம் நிறைவடைந்த பின் தேர்தல் தொடர்பான பொதுக்கூட்டம், ஊர்வலம் நடத்தக்கூடாது. தொலைக்காட்சி, ரேடியோ, சமூக வலைதளங்களில் தேர்தல் பிரசாரம் செய்யக்கூடாது என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

    தேர்தல் விதிகளை மீறினால் 2 ஆண்டு சிறை, அபராதம் விதிக்கப்படும் என தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • புதிய எஸ்.யு.வி. மாடல் மூன்று நிறங்களில் கிடைக்கிறது.
    • புதிய 2.2 லிட்டர் எம்ஹாக் டீசல் என்ஜின் வழங்கப்படுகிறது.

    மஹிந்திரா நிறுவனம் இந்திய சந்தையில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட பொலிரோ நியோ பிளஸ் மாடலை அறிமுகம் செய்தது. மூன்றடுக்கு இருக்கைகள் கொண்ட பொலிரோ நியோ பிளஸ் எஸ்.யு.வி. தற்போது இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 11 லட்சத்து 39 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என துவங்குகிறது.

    இந்த கார் 2-3-4 இருக்கை அமைப்புடன் மொத்தம் ஒன்பது பேர் பயணம் செய்யக்கூடிய வகையில் கிடைக்கிறது. பொலிரோ நியோ பிளஸ் மாடல் P4 மற்றும் P10 என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இவற்றின் விலை முறையே ரூ. 11 லட்சத்து 39 ஆயிரம் மற்றும் ரூ. 12 லட்சத்து 49 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

     


    பொலிரோ நியோ பிளஸ் 7 சீட்டர் வேரியண்ட் உடன் ஒப்பிடும் போது புதிய நியோ பிளஸ் மாடலின் விலை ரூ. 1 லட்சத்து 49 ஆயிரம் வரை அதிகம் ஆகும்.

    புதிய எஸ்.யு.வி. மாடல்- நபோலி பிளாக், மஜெஸ்டிக் சில்வர் மற்றும் டைமண்ட் வைட் என மூன்று நிறங்களில் கிடைக்கிறது. இந்த காரின் கேபினில் பிரீமியம் இத்தாலிய இண்டீரியர்கள், 9 இன்ச் அளவில் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ப்ளூடூத், யு.எஸ்.பி. கனெக்டிவிட்டி வழங்கப்படுகிறது.

    மஹிந்திரா பொலிரோ நியோ பிளஸ் மாடலில் புதிய 2.2 லிட்டர் எம்ஹாக் டீசல் என்ஜின் வழங்கப்படுகிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 118 ஹெச்.பி. பவர் மற்றும் 280 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது.

    • சிவகங்கை பாராளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் போட்டியிடுகிறார்.
    • தேர்தல் விதிமீறல் தொடர்பாக ஸ்ரீநிதி கார்த்தி சிதம்பரம் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    சிவகங்கை:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை மறுதினம் நடைபெற உள்ளது. இதையடுத்து, அரசியல் கட்சியினர் இறுதிநேர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

    சிவகங்கை பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரத்தை ஆதரித்து அவரது மனைவி ஸ்ரீநிதி கார்த்தி சிதம்பரம் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

    இதற்கிடையே, இன்று மானாமதுரை காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் இருந்து ஸ்ரீநிதி கார்த்தி சிதம்பரம் பிரசாரம் செய்யச் சென்றார். அப்போது தேர்தல் அதிகாரிகள் அவரிடம் பிரசாரம் செய்வதற்கான அனுமதிக் கடிதம் குறித்து கேட்டனர். அப்போது ஆட்டோவில் சென்று பிரசாரம் செய்வதற்கான அனுமதி கடிதத்தைக் காட்டினார்.

    தேர்தல் அதிகாரிகள் அதனை ஏற்க மறுத்ததால் அவர்களுடன் தி.மு.க.வினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு சிறிது பரபரப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து ஸ்ரீநிதி கார்த்தி சிதம்பரம் வார்டு வாரியாக சென்று பிரசாரம் மேற்கொண்டார்.

    இந்நிலையில், தேர்தல் அதிகாரி செந்தில்வேல் அளித்த புகாரின் அடிப்படையில், தேர்தல் விதிமுறைகளை மீறியதாக ஸ்ரீநிதி கார்த்தி சிதம்பரம், மாவட்ட காங்கிரஸ் தலைவர் சஞ்சய் காந்தி உள்பட 60 பேர் மீது மானாமதுரை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    • இந்தியாவின் கடன் 2014-ல் 55 லட்சம் கோடி ஆனால் பாஜக ஆட்சியில் 204 லட்சம் கோடி
    • மோடி அரசு விளம்பரங்களுக்காக 3000 கோடிக்கு மேல் செலவு செய்துள்ளது

    மோடி தலைமையிலான பாஜகவை மக்கள் நிராகரிப்பதற்கு 100 காரணங்கள் உள்ளது என்று அமைச்சர் மனோ தங்கராஜ் தனது எக்ஸ் பக்கத்தில் பட்டியலிட்டுள்ளார். அவை,

    1. பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வு

    2. அத்தியாவசிய பொருள்களின் விலை உயர்வு

    3. 8250 கோடி தேர்தல் பத்திர ஊழல்

    4. ரஃபேல் விமானங்கள் வாங்கியதில் ஊழல்

    5. 23 பொதுத்துறை நிறுவனங்கள் தனியாருக்கு தாரைவார்ப்பு

    6. கார்ப்பரேட்டுகளின் கடன் 25 லட்சம் கோடி தள்ளுபடி

    7. GST வரி

    8. கருப்புப் பணம் ஒழிப்பு நாடகம்

    9. சிறுகுறு தொழில்கள் முடக்கம்

    10. IT, ED, CBI போன்ற தன்னாட்சி அமைப்புகளை எதிர்க்கட்சிகள் மீது ஏவி விட்டது

    11. CAG- 7.5 லட்சம் கோடி ஊழல்

    12. ஊழல் எதிர்ப்பு அமைப்பான லோக்பால் செயலிழப்பு

    13. PM-Cares ஊழல்

    14. விவசாயிகள் வருமானத்தை இரட்டிப்பாக்குவதில் தோல்வி

    15. இந்தியாவின் கடன் 2014-ல் 55 லட்சம் கோடி ஆனால் பாஜக ஆட்சியில் 204 லட்சம் கோடி

    16. டெல்லியில் போராடிய விவசாயிகள் மீது ட்ரோன் மூலம் தாக்குதல்

    17. சாமானிய மக்களின் வங்கி கணக்கில் இருந்து 35,000 கோடி அபேஸ்

    18. CAA

    19. பொய் செய்திகள் பரப்புவதில் இந்தியா முதலிடம்

    20. மோடி அரசு விளம்பரங்களுக்காக 3000 கோடிக்கு மேல் செலவு செய்துள்ளது

    21. சண்டிகர் மாநகர மேயர் தேர்தலில் பாஜகவின் முறைகேடு

    22. அக்னிபாத் திட்டம்

    23. புல்வாமா தாக்குதல்-40 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டது

    24. இந்திய பாராளுமன்ற கட்டிடத்தில் வண்ண புகை குண்டுகளை கொண்டு தாக்குதல்

    25. எதிர்க்கட்சிகளின் வங்கி கணக்கு முடக்கம்

    26. ஊடகங்களின் மீதான அடக்குமுறை

    27. வேலையில்லா திண்டாட்டம்

    28. பணவீக்கம்

    29. தனிநபர் வருமானம் குறைப்பு

    30. 5-டிரில்லியன் டாலர் இலக்கு தோல்வி

    31. பட்டினி குறியீட்டில் 111-வது இடம்

    32. சாதிவாரி கணக்கெடுப்பு

    33. இந்திய எல்லையான லடாக்,அருணாச்சல பிரதேசத்தை சீனாவிற்கு தாரைவார்த்தது

    34. இந்தி/சமஸ்கிருத மொழிகளுக்கே முன்னுரிமை

    35. சுங்கச்சாவடிகளில் வசூல் வேட்டை

    36. எட்டு வயது சிறுமி ஆசிபா கூட்டு வன்புணர்வு செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டது

    37. பில்கிஸ் பானு கூட்டு பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டது

    38. உத்திரபிரதேசத்தில் பட்டியலின சிறுமி பாஜக சட்டமன்ற உறுப்பினர் குல்தீப் சிங் செங்கரால் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டது

    39. பாஜக எம்.பி.பிரிட்ஜ் பூஷன் சிங், இந்திய மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் துன்புறுத்தல்

    40. மணிப்பூரில் பெண்கள் வீதிகளில் நிர்வாணமாக அழைத்துச் செல்லப்பட்டு கூட்டு பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு,கொலை செய்யப்பட்டது

    41. உத்திரபிரதேசம் ஹத்ராஸ் பகுதியில் பட்டியலின பெண் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது

    42. மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதி அளிப்பு திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு 33% ஆக குறைப்பு

    43. பாஜக ஆட்சியில் பட்டியலின / பழங்குடியின மக்கள் மீது நடத்தப்படும் வன்கொடுமைகள் 40% சதவீதம் உயர்வு

    44. பாஜக ஐ.டி.விங் நிர்வாகிகள் 3 பேர் 20 வயது கல்லூரி மாணவியை கூட்டு பாலியல் வன்புணர்வு செய்தது

    45. கல்வி சுதந்திர குறியீட்டில் பின்னடைவு

    46. புதிய கல்விக் கொள்கை

    47. சிறுபான்மை மாணவர்களுக்கான ஆதரவு ஊதியத்தை ரத்து செய்தது

    48. 141 நாடாளுமன்ற எம்பிக்கள் பணியிடை நீக்கம்

    49. தமிழ்நாட்டிற்கான நிதி பங்கிட்டில் பாகுபாடு

    50. மாநில சுயாட்சியில் ஓன்றிய அரசின் தலையீடு

    51. பழங்குடியின பெண் குடியரசு தலைவரை புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழா மற்றும் ராமர் கோவில் திறப்பு விழாவிற்கு அழைக்காதது

    52. நாடாளுமன்ற நிலை குழுக்களுக்கு அனுப்பப்படும் மசோதாக்கள் விகிதம் 71% இருந்து 21% ஆக குறைப்பு

    53. பெண்களுக்கான 33% சதவீத இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தாதது

    54. தேசிய குற்ற ஆவண காப்பக அறிக்கையின்படி பாஜக ஆட்சியில் ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை

    55. கடந்த 10 ஆண்டுகளில் ஒரு முறை கூட மோடி பத்திரிகையாளர் சந்திப்பை எதிர்கொள்ளவில்லை

    56. மதத்தின் அடிப்படையில் மக்களை பிளவுபடுத்தும் பாஜக

    57. நாட்டின் வளங்களை கார்ப்பரேட்டுகள் சுரண்ட பாரத் மாலா, சாகர் மாலா, உதான் திட்டங்கள்

    58. ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் முறைகேடு

    59. 5-ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு செய்வதில் ஊழல்

    60. ஸ்பெக்ட்ரம் ஊழல்

    61. ஸ்கில் இந்தியா மோசடி

    62. 9,000 கோடி மோசடி செய்த விஜய் மல்லையா மற்றும் 22,000 கோடி மோசடி செய்த நீரவ் மோடியை வெளிநாடுகளுக்கு தப்ப வைத்தது

    63. தேசிய நகர்புற வாழ்வாதார திட்டத்தில் ஊழல்

    64. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சரிவு

    65. ONGC ஊழல்

    66. டெண்டர் முறைகேடு

    67. கேமன் தீவு FDI ஊழல்

    68. அமித்ஷாவின் மகன் ஜெய்ஷா நிறுவன ஊழல்

    69. வியாபம் ஊழல்

    70. DMAT ஊழல்

    71. போலி நாணய மோசடியில் பாஜகவினர்

    72. ஜார்க்கண்ட் நிலக்கரி ஊழல்

    73. குஜராத்தில் அதானிக்காக நில மோசடி

    74. அம்பானி, அதானி சொத்து மதிப்பு பாஜக ஆட்சியில் 80% உயர்ந்துள்ளது

    75. டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு ரூ.83.2 ஆக வீழ்ச்சி

    76. மோடி அரசு ஊழல் மூலம் தனது கட்சியின் சொத்துக்களையும், ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட அமைப்புகளின் சொத்துக்களையும் பன்மடங்கு பெருக்கி உள்ளது

    77. 2000 ரூபாய் நோட்டை அறிமுகம் செய்து பிறகு செல்லாது என அறிவித்தது

    78. பத்திரிக்கை சுதந்திரக் குறியீட்டில் 161 வது இடம்

    79. உலக ஊழல் குறியீட்டில் 93-வது இடம்

    80. கடந்த 10 ஆண்டுகளில் மாணவர்களின் தற்கொலை ஒரு லட்சத்திற்கும் மேல்

    81. இந்தியாவில் படித்த இளைஞர்கள் 83% பேர் வேலைவாய்ப்பின்றி உள்ளனர்

    82. வெளிநாட்டு முதலீடு உடைய நிறுவனங்கள் பாஜகவிற்கு நன்கொடை

    83. சமீபத்தில் ஜம்மு & காஷ்மீரில் மோடி ஆட்டிறைச்சி சாப்பிடும் மக்களை இழிவு படுத்தி இருக்கிறார்

    84. தேர்தல் பிரச்சாரங்களில் பிரதமர் மோடியின் பேச்சு முழுக்க முழுக்க மதத்தையும், சாதியையும் சார்ந்தே உள்ளது

    85. மோடி சொன்ன அனைவரின் வங்கிக் கணக்கில் 15 லட்சம் வராதது

    86. 2019-2023 வரை 35,680 MSME தொழில்கள் மூடப்பட்டுள்ளன

    87. பல ஆயிரம் கோடி ஊழல் செய்த 25 அரசியல்வாதிகள் பாஜகவில் இணைந்து தப்பித்துள்ளனர்

    88. இந்திய குடும்பங்களின் கடன் அளவு உயர்வு

    89. ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே மொழி

    90. கடந்த 10 ஆண்டுகளில் பாஜக ஆட்சியில் தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படை அடக்குமுறை அதிகரிப்பு

    91. இன்டர்நெட் இணைப்பை முடக்குவதில் இந்தியா முதலிடம்

    92. ரயில்வே வெயிட்டிங் லிஸ்ட் மூலம் 1230 கோடி வசூல்

    93. மக்கள் மத்தியில் நிலவும் ஏற்றத்தாழ்வு அதிகரிப்பு

    94. EVM தயாரிப்பில் பாஜகவினர்

    95. இந்தியாவில் 19.3% குழந்தைகள் 24 மணிநேர இடைவெளியில் பட்டினியால் தவிக்கின்றனர்

    96. எதிர்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆளுநர்களை வைத்து அரசியல் செய்வது

    97. மணிப்பூரில் கார்கில் போருக்காக உயிர்த்தியாகம் செய்ய முன்வந்த ராணுவ வீரரின் மனைவி பொதுவெளியில் நிர்வாணமாக்கப்பட்டு பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டது

    98. இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்புப் பேச்சுகளில் 75% பாஜக ஆளும் மாநிலங்களில் நடக்கிறது

    99. தேர்தல் பத்திர நன்கொடைக்காக கம்பெனிகள் சட்டத்தில் திருத்தம் மேற்கொண்டது

    100. மோடி ஆட்சியில் வாராக்கடன் 55.5 லட்சம் கோடி

    என்று அவர் பதிவிட்டுள்ளார்.

    ×