
தமிழகம், புதுவையில் பிளஸ்-2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் நடைபெற்றது.
இத்தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது. புதுவை மாநிலத்தில் 92.94 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இதுதொடர்பாக புதுவை அரசின் கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
புதுவை மற்றும் காரைக்கால் பகுதியை சேர்ந்த 6 ஆயிரத்து 908 மாணவர்கள், 7 ஆயிரத்து 786 மாணவிகள் என மொத்தம் 14 ஆயிரத்து 694 மாணவர்கள் பிளஸ்-2 தேர்வு எழுதினர்.
இத்தேர்வில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் படித்த 13 ஆயிரத்து 657 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் மாணவர்கள் 6 ஆயிரத்து 236, மாணவிகள் 7 ஆயிரத்து 421. தேர்வு எழுதிய மாணவர்களில் 92.94 சதவீதத்தினர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது கடந்த ஆண்டை விட 5.62 சதவீதம் அதிகம்.
புதுவை, காரைக்காலில் அரசு பள்ளிகளை சேர்ந்த 2 ஆயிரத்து 677 மாணவர்கள், 3 ஆயிரத்து 754 மாணவிகள் என மொத்தம் 6 ஆயிரத்து 431 மாணவர்கள் தேர்வு எழுதினர்.

தனியார் பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 98.64 ஆகும். பிராந்தியம் வாரியாக அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் புதுவையில் 93.80 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது கடந்த ஆண்டை விட 5.71 சதவீதம் அதிகம்.
காரைக்காலில் 88.16 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது கடந்த ஆண்டை விட 5.13 சதவீதம் அதிகம்.
பிராந்தியம் வாரியாக அரசு பள்ளிகளில் புதுவையில் 86.03 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது கடந்த ஆண்டைவிட 12.84 சதவீதம் அதிகம். காரைக்காலில் 84.14 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இது கடந்த ஆண்டைவிட 8.25 சதவீதம் அதிகம். புதுவை பகுதியில் 53 பள்ளிகள் 100 சதவீத வெற்றியை பெற்றுள்ளது. காரைக்காலில் 4 பள்ளிகள் 100 சதவீத வெற்றியை பெற்றுள்ளது.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டு உள்ளது. #Plus2Result #Plus2Exam #TNResults