
கர்நாடக மாநிலத்தில் ஜே.டி.எஸ்.-காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. கூட்டணி ஆட்சியை கவிழ்க்க பா.ஜனதா தொடர்ந்து சதி செய்து வருவதாக 2 கட்சி தலைவர்களும் குற்றம் சாட்டி இருந்தனர்.

இந்த நிலையில் முதல் மந்திரி குமாரசாமி இன்று ஆடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் ஜே.டி.எஸ். எம்.எல்.ஏ. நாகனகவுடாவுக்கு மந்திரி பதவியும், ரூ. 50 கோடியும் தருவதாக எடியூரப்பா ஆசை வார்த்தை கூறி பேசிய காட்சிகள் இடம்பெற்று இருந்தன.
நாகனகவுடாவின் மகனும், எடியூரப்பாவும் போனில் பேசிய தகவல்கள் பதிவு செய்யப்பட்டு இன்று ஆடியோவாக வெளியிடப்பட்டது. இந்த ஆடியோ வெளியானதால் பா.ஜனதாவினர் கலக்கத்தில் உள்ளனர். #Kumaraswamy #Yeddyurappa