
இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் இருந்து பங்க்கால் பினாங்கு தீவுக்கு சென்ற ‘லயன் ஏர்’ பயணிகள் விமானம் புறப்பட்ட 13 நிமிடத்தில் கடலில் விழுந்து நொறுங்கியது.
இந்த பயங்கர விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 178 பயணிகள், 2 பச்சிளங் குழந்தைகள், ஒரு சிறுவன், 2 விமானிகள், 6 பணியாளர்கள் என 189 பேர் பலியானார்கள்.
இந்தோனேசிய நிதித்துறை அமைச்சகத்தில் பணியாற்றிய 20 ஊழியர்களும் அந்த விமானத்தில் பயணம் செய்தனர்.
விமானம் கடலில் விழுவதற்கு முன் பதிவான செல்போன் வீடியோ வெளியாகியுள்ளது. அதில் என்ஜின் இயக்கம் நின்று மின் விளக்கு, ஏ.சி., காற்றழுத்த கருவி போன்றவைகள் செயல்படாததால் பயணிகள் அதிர்ச்சியுடன் கதறினார்கள். இனி பிழைக்க வழியில்லை என்று உயிர் போகும் கடைசி நிமிடத்தில் கடவுளை உருக்கமாக வேண்டி அழும் கண்ணீர் காட்சிகள் உலகையே சோகத்தில் ஆழ்த்தியது.

கருப்புப் பெட்டியைக் கண்டுபிடித்த பிறகே விமான விபத்திற்கான முழு விவரங்கள் தெரிய வரும் என்றும் அதிகாரிகள் கூறுகின்றனர்.

இதனால் விமான நிலைய அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். அதன் பிறகு விமானத்தை தேடும் பணியில் ஈடுபட்டபோது அந்த விமானம் கடலில் விழுந்து நொறுங்கியது தெரிய வந்தது.
விமான விபத்து குறித்து விசாரணை நடத்திய இந்தோனேசிய விமான போக்குவரத்து துறை ‘லயன் ஏர்’ விமான நிறுவனத்தின் தொழில்நுட்ப இயக்குனர் மற்றும் பணியாளர்களை பணி நீக்கம் செய்து நடவடிக்கை எடுத்துள்ளது. #LionAirFlight #PlaneMissing #LionAirPlaneCrashes #LionAir