
முன்னாள் அமைச்சரும், முன்னாள் எம்.பி.யுமான கண்ணன் புதுவை அரசியலில் முக்கிய சக்தியாக திகழ்ந்து வந்தார்.
சமீப காலமாக அரசியலில் ஏற்பட்ட பல்வேறு பிரச்சினைகளால் எதிலும் தீவிரம் காட்டாமல் இருந்து வந்தார்.
சமீபத்தில் அவரது ஆதரவாளர்கள் அவரை சந்தித்து புதிய கட்சி தொடங்க வேண்டும் என்று வற்புறுத்தினார்கள். ஆனால், எந்த முடிவும் எடுக்காமல் கண்ணன் மவுனம் காத்து வந்தார்.

காங்கிரஸ் கட்சியில் முன்னணி தலைவராக இருந்த கண்ணன் மூப்பனார் தலைமையில் த.மா.கா. கட்சி உதயமானபோது அந்த கட்சிக்கு சென்றார்.
பின்னர் 2 தடவை தனியாக கட்சி தொடங்கி நடத்தி வந்தார். ஒவ்வொரு தடவையும் கட்சியை கைவிட்டு விட்டு காங்கிரஸ் கட்சியில் மீண்டும் சேர்ந்தார்.
பாராளுமன்ற தேர்தலின் போது இந்த கட்சி தேசிய கட்சிகள் ஏதாவது ஒரு கட்சியுடன் கூட்டணி வைக்கலாம். சட்டசபை தேர்தலில் முழு பலத்துடன் இறங்கும் திட்டத்துடன் கட்சியை நடத்துவார் என கருதப்படுகிறது. #FormerMPKannan