
அம்மா மக்கள் முன்னேற்றக்கழக கொள்கை பரப்புச்செயலாளர் தங்க தமிழ்செல்வன் மதுரையில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் போலீஸ் அதிகாரிகளின் வீடுகள் உள்பட 40 இடங்களில் சி.பி.ஐ. சோதனை நடைபெற்றிருப்பது தமிழகத்திற்கு தலைக்குனிவான செயலாகும்.
ரெயில் விபத்து ஏற்பட்டால் அதற்கு பொறுப்பு ஏற்று அந்த துறையின் அமைச்சர் ராஜினாமா செய்வது வழக்கம்.
அதே போல் ரூ. 40 கோடி லஞ்சம் பெற்றதாக ஊழல் புகார் கூறப்பட்டுள்ள அமைச்சர் விஜயபாஸ்கர் ராஜினாமா செய்ய வேண்டும். தன் மீதான வழக்கை சட்டப்படியாக சந்தித்து கோர்ட்டில் நிரபராதி என நிரூபித்து மீண்டும் அவர் அமைச்சர் பதவி ஏற்கலாம். இது தான் நடைமுறை.
இவ்வாறு அவர் கூறினார். #ThangaTamilSelvan #Vijayabaskar #CBIRaid