
புதுடெல்லி:
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் கத்துவா பகுதியில் 8 வயது சிறுமி சமீபத்தில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். இதேபோல், உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் உன்னாவ் பகுதியில் பா.ஜ.க எம்.எல்.ஏ. மற்றும் அவரது சகோதரர்களால் கற்பழிக்கப்பட்டதாக அளிக்கப்பட்ட புகாரின்மீது நடவடிக்கை எடுக்கக் கோரி முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் வீட்டின் முன்னர் தீக்குளிக்க முயன்ற இளம்பெண்ணின் தந்தை போலீஸ் காவலின்போது மரணமடைந்தார்.
இந்த கொடுமைகளுக்கு மத்திய, மாநில அரசுகள் உரிய முறையில் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ளது.
டெல்லியில் நேற்று முன்தினம் நள்ளிரவில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்றுதிரண்டு மெழுகுவர்த்தி ஏந்தி பேரணி சென்றனர். அப்போது பேசிய ராகுல் காந்தி, இவ்விவகாரத்தில் பிரதமர் மவுனமாக இருப்பது ஏன்? என்றார்.
இதற்கிடையே, டெல்லியில் நேற்று நடந்த அம்பேத்கர் நினைவு இல்லம் திறப்பு விழாவில் பங்கேற்ற பிரதமர் மோடி, எந்த குற்றவாளியையும் தப்பவிட மாட்டோம், நமது மகள்களுக்கான நீதி நிச்சயமாக கிடைக்கும் என குறிப்பிட்டார்.
இந்நிலையில், கத்துவா மற்றும் உன்னாவ் சம்பவங்களில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு எப்போது தண்டனை கிடைக்கும் என இந்தியா எதிர்பார்த்து இருப்பதாக பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் கூறுகையில், நீண்ட மவுனத்துக்கு பிறகு வாய் திறந்துள்ள பிரதமர் மோடிக்கு நன்றி. நமது மகள்களுக்கான நீதி நிச்சயம் கிடைக்கும் என கூறியுள்ளீர்கள். அது எப்போது என்பதை இந்தியா எதிர்பார்த்து காத்திருக்கிறது.
குற்றவாளிகளுக்கு எப்போது தண்டனை கிடைக்கும் என பிரதமர் மோடிக்கு கேள்வி எழுப்பியுள்ளார். #RahulGandhi #Tamilnadu
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் கத்துவா பகுதியில் 8 வயது சிறுமி சமீபத்தில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். இதேபோல், உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் உன்னாவ் பகுதியில் பா.ஜ.க எம்.எல்.ஏ. மற்றும் அவரது சகோதரர்களால் கற்பழிக்கப்பட்டதாக அளிக்கப்பட்ட புகாரின்மீது நடவடிக்கை எடுக்கக் கோரி முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் வீட்டின் முன்னர் தீக்குளிக்க முயன்ற இளம்பெண்ணின் தந்தை போலீஸ் காவலின்போது மரணமடைந்தார்.
இந்த கொடுமைகளுக்கு மத்திய, மாநில அரசுகள் உரிய முறையில் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ளது.
டெல்லியில் நேற்று முன்தினம் நள்ளிரவில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்றுதிரண்டு மெழுகுவர்த்தி ஏந்தி பேரணி சென்றனர். அப்போது பேசிய ராகுல் காந்தி, இவ்விவகாரத்தில் பிரதமர் மவுனமாக இருப்பது ஏன்? என்றார்.
இதற்கிடையே, டெல்லியில் நேற்று நடந்த அம்பேத்கர் நினைவு இல்லம் திறப்பு விழாவில் பங்கேற்ற பிரதமர் மோடி, எந்த குற்றவாளியையும் தப்பவிட மாட்டோம், நமது மகள்களுக்கான நீதி நிச்சயமாக கிடைக்கும் என குறிப்பிட்டார்.
இந்நிலையில், கத்துவா மற்றும் உன்னாவ் சம்பவங்களில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு எப்போது தண்டனை கிடைக்கும் என இந்தியா எதிர்பார்த்து இருப்பதாக பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் கூறுகையில், நீண்ட மவுனத்துக்கு பிறகு வாய் திறந்துள்ள பிரதமர் மோடிக்கு நன்றி. நமது மகள்களுக்கான நீதி நிச்சயம் கிடைக்கும் என கூறியுள்ளீர்கள். அது எப்போது என்பதை இந்தியா எதிர்பார்த்து காத்திருக்கிறது.
குற்றவாளிகளுக்கு எப்போது தண்டனை கிடைக்கும் என பிரதமர் மோடிக்கு கேள்வி எழுப்பியுள்ளார். #RahulGandhi #Tamilnadu