search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை செய்து கொண்ட போலீஸ்காரர் கல்லாணை.
    X
    தற்கொலை செய்து கொண்ட போலீஸ்காரர் கல்லாணை.

    மதுரையில் ஆயுதப்படை காவலர் தற்கொலை

    மதுரையில் ஆயுதப்படை போலீஸ்காரர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மதுரை:

    திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் கல்லாணை (வயது 24). இவர் சென்னையில் சிறப்பு ஆயுதப்படையில் போலீஸ்காரராக பணியாற்றி வந்தார். இவரது நண்பர் சுந்தர். மதுரை ஆயுதப்படையில் பணியாற்றி வருகிறார்.

    இவர் ஆயுதப்படை குடியிருப்பில் வசித்து வருகிறார். இவரது வீட்டுக்கு கல்லாணை வந்திருந்தார்.

    நேற்று சுந்தர் பணிக்கு சென்றுவிட்டார். கல்லாணை மட்டும் வீட்டில் இருந்தார். இந்த நிலையில் அவர் அங்கு தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்த தகவல் கிடைத்ததும் தல்லாகுளம் போலீசார் விரைந்து சென்று கல்லாணை உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில், ஒழுங்கீன நடவடிக்கை காரணமாக கல்லாணை தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டு இருப்பதும், சுந்தரை பார்க்க வந்த இடத்தில் தற்கொலை செய்திருப்பதும் தெரியவந்தது.

    இருப்பினும் அவர் தற்கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×