என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மன்னார்குடி அருகே குடிநீர் கேட்டு குழாய்க்கு மாலை அணிவித்து கிராம மக்கள் நூதன போராட்டம்
Byமாலை மலர்1 Jun 2019 5:00 PM GMT (Updated: 1 Jun 2019 5:00 PM GMT)
மன்னார்குடி அருகே குடிநீர் கேட்டு குழாய்க்கு மாலை அணிவித்து, ஒப்பாரி வைத்து கிராம மக்கள் தங்களின் அவல நிலையை வெளிப்படுத்தினர்.
மன்னார்குடி:
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள செருமங்களம் கிராமத்தில் உள்ள தெருவில் சுமார் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த 200-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு உரிய குடிநீர் வசதி செய்து தரவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி வந்தனர். குடிநீர் கேட்டு அரசு அதிகாரிகளிடம் மனு அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி கிராம மக்கள் போராட்டம் நடத்தினர். போராட்டத்தின் போது குடிநீர் கேட்டு அப்பகுதியில் உள்ள குடிநீர் குழாய்க்கு மாலை அணிவித்தும், ஒப்பாரி வைத்தும் கிராம மக்கள் தங்களின் அவல நிலையை வெளிப்படுத்தினர்.
செருமகலம் பகுதியில் பழுதடைந்த நிலையில் உள்ள மேல்நிலை நீர்தேக்கத் தொட்டியை விரைவில் சரி செய்து தட்டுப்பாடு இன்றி குடிநீர் வழங்க வேண்டும் என வலியுறுத்தினர். கடந்த ஏப்ரல் மாதம் இதே தெருவில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்ட நிலையில் தேர்தலையொட்டி குடிநீர் தேவை தற்காலிகமாக சரி செய்யப்பட்டது.
இந்நிலையில் தற்போது கடந்த பல நாட்களாக மீண்டும் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைத்து தரப்பினரும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர் என கிராம மக்கள் வேதனை தெரிவித்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X