search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உள்ளாட்சி தேர்தலில் எங்களின் வாக்கு சதவீதம் தெரியவரும்- தினகரன்
    X

    உள்ளாட்சி தேர்தலில் எங்களின் வாக்கு சதவீதம் தெரியவரும்- தினகரன்

    உள்ளாட்சி தேர்தல் வரும்போது எங்களின் வாக்கு சதவீதம் என்ன என்பது தெரிய வரும் என்று டி.டி.வி.தினகரன் தெரிவித்தார்.
    சென்னை:

    அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் பெங்களூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    ஏற்கனவே நாங்கள் சரியான முறையில் தான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம். மேற்கொண்டு எவ்வளவு சிறப்பாக செயல்பட முடியுமோ அதுபோன்று செயல்படுவோம்.

    வருகிற ஜூன் 1-ந்தேதி கூட மாவட்ட செயலாளர்கள், தலைமை நிர்வாகிகள், வேட்பாளர்கள் ஆகியோருடன் முதல் கட்டமாக ஆலோசனை நடத்துகிறேன்.

    அதன் பிறகு அடுத்த கட்ட நிர்வாகிகளை சந்தித்து அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்காக நாங்கள் தயாராவோம்.

    நாங்குநேரி சட்டமன்ற தொகுதியில் இடைத்தேர்தல் வரலாம் என்று நினைக்கிறேன். அதுபோல வேலூர் எம்.பி. தொகுதியில் தேர்தல் நடைபெற வேண்டி இருக்கிறது. உள்ளாட்சித் தேர்தல் வரும் அதற்கும் தயாராவோம். இதெல்லாம் வழக்கமான நடவடிக்கை தானே.

    பாராளுமன்ற தேர்தலின்போது நான் அளித்த வாக்குகள் என்னவானது என்று பல கிராமங்களில், நகரங்களில் மக்கள் கேட்கிறார்கள். நாங்கள் வாக்களித்த பூத்தில் அ.ம.மு.க.விற்கு 14 வாக்குகள்தான் பதிவாகியுள்ளது. நாங்கள் அ.ம.மு.க.விற்குதான் வாக்களித்தோம்.

    ஆனால் நமது பூத்தில் அ.ம.மு.க.விற்கு 14 வாக்குகள் பதிவாகியுள்ளதே என்று நான் நடைபயிற்சி சென்றபோது எங்கள் பகுதி மக்களே என்னிடம் கேட்கிறார்கள். இதுபோன்றுதான் தமிழகம் முழுவதும் மக்கள் கேட்கிறார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும்.

    எங்களுக்கு பதிவாக வேண்டிய சதவீதம் என்ன? ஆனால் பதிவான சதவீதம் எவ்வளவு என்றுதான் நாங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறோம். அதனால் உள்ளாட்சி தேர்தல் வரும்போது எங்களின் வாக்கு சதவீதம் என்ன என்பது உங்களுக்கு தெரியப்போகிறது.

    இவ்வாறு தினகரன் கூறினார்.
    Next Story
    ×