search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பலியான சையத் இப்ராஹிம் - விபத்தில் சிக்கிய கார்.
    X
    பலியான சையத் இப்ராஹிம் - விபத்தில் சிக்கிய கார்.

    நாமக்கல் அருகே வக்கீல் விபத்தில் பலி

    நாமக்கல் மாவட்டம் நல்லிபாளையம் அருகே லாரி மீது கார் மோதிய விபத்தில் வக்கீல் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
    நாமக்கல்:

    கரூர் மாவட்டம், பள்ளப்பட்டியை சேர்ந்தவர் சையத் இப்ராஹிம் (50). இவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வந்தார். இவர் நேற்று இரவு காரில் சேலத்திலிருந்து கரூர் நோக்கி சென்றார்.

    காரை முகமது மீரான் (26). ஓட்டினார். கார் நாமக்கல் முதலைப்பட்டி பைபாஸ் நல்லிபாளையம் அருகே சென்ற போது காரின் முன்பு சென்ற லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.

    இந்த விபத்தில் வழக்கறிஞர் சையத் இப்ராஹிம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். டிரைவருக்கு கை எலும்பு முறிவு ஏற்பட்டது. கார் மோதிய லாரி நிற்காமல் சென்று விட்டது. தகவல் அறிந்த நல்லிபாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விபத்தில் பலியான சையத்இப்ராஹிம் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு நாமக்கல் மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்துக்கு காரணமான லாரியை கீரம்பூர் சுங்கசாவடியில் உள்ள கண்காணிப்பு கேமரா மூலம் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

    விபத்தில் பலியான வக்கீல் சையத் இப்ராஹிம் பள்ளப்பட்டி தி.மு.க. முன்னாள் சேர்மனாக பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×