search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாராளுமன்ற தேர்தல் முடிவு- திருப்பூரில் இந்திய கம்யூ. வேட்பாளர் வெற்றி
    X

    பாராளுமன்ற தேர்தல் முடிவு- திருப்பூரில் இந்திய கம்யூ. வேட்பாளர் வெற்றி

    திருப்பூர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்டு வேட்பாளர் சுப்பராயன் 5,08,725 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
    திருப்பூர்:

    பாராளுமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. தமிழகம் மற்றும் புதுவையில் தேர்தல் நடைபெற்ற 39 பாராளுமன்றத் தொகுதிகளில் திமுக கூட்டணி 38 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.

    திருப்பூர் தொகுதியில் 15,29,836 மொத்த வாக்காளர்கள் ஆவர். இதில் 11,15,610 வாக்குகள் பதிவானது.

    தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி திருப்பூர் தொகுதியில் போட்டியிட்டது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சுப்பராயன் போட்டியிட்டார். அவர் 5,08,725 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

    அ.தி.மு.க. வேட்பாளர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் 4,15,357 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளார்.

    அமமுக வேட்பாளர் எஸ்.ஆர்.செல்வம் 43 ஆயிரத்து 816 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜெகநாதன் 42 ஆயிரத்து 189 வாக்குகளும், மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் வி.எஸ்.சந்திரகுமார் 64 ஆயிரத்து 657 வாக்குகளும் பெற்றுள்ளனர். 
    Next Story
    ×