என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திண்டுக்கல்லில் திமுக வெற்றி: 3-வது இடத்தை பிடித்த நாம் தமிழர் கட்சி
Byமாலை மலர்24 May 2019 5:43 AM GMT (Updated: 24 May 2019 5:43 AM GMT)
திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் வேலுசாமி 5,38,972 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி வாக்குகள் அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது. இந்த தொகுதியில் தி.மு.க. சார்பில் வேலுசாமி, பா.ம.க. சார்பில் ஜோதிமுத்து, அ.ம.மு.க. சார்பில் ஜோதிமுருகன், நாம் தமிழர் கட்சி சார்பில் நடிகர் மன்சூர் அலிகான், மக்கள் நீதிமய்யம் சார்பில் டாக்டர் சுதாகரன் ஆகியோர் போட்டியிட்டனர்.
வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் தி.மு.க. வேட்பாளர் வேலுசாமி முன்னிலையில் இருந்தார். 23 சுற்றுகள் முடிவில் அவர் 5,38,972 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். ஓட்டு விபரம் வருமாறு:-
தி.மு.க - 7,46,523
பா.ம.க. - 2,07,551
ம.நீ.ம. - 38,784
பெரும்பாலான தொகுதிகளில் பிரதான கட்சிகளை அடுத்த 3-ம் இடத்தை அ.ம.மு.க. பிடித்திருந்தது. சில தொகுதிகளில் 3-ம் இடத்தை மக்கள் நீதி மய்யமும், நாம் தமிழர் கட்சியும் கைப்பற்றி இருந்தன. அந்த வகையில் திண்டுக்கல் தொகுதியில் 3-ம் இடத்தை நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மன்சூர்அலிகான் பிடித்திருந்தார்.
ஏற்கனவே தேர்தல் பிரசாரத்தின் போது நூதன முறையில் சாலையோர வியாபாரிகளுடன் அமர்ந்தும், டீக்கடைகளில் டீ போட்டும், புரோட்டா கடைகளில் மாவு தயாரித்து கொடுத்ததும் பிரசாரம் செய்து பரபரப்பை ஏற்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி வாக்குகள் அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது. இந்த தொகுதியில் தி.மு.க. சார்பில் வேலுசாமி, பா.ம.க. சார்பில் ஜோதிமுத்து, அ.ம.மு.க. சார்பில் ஜோதிமுருகன், நாம் தமிழர் கட்சி சார்பில் நடிகர் மன்சூர் அலிகான், மக்கள் நீதிமய்யம் சார்பில் டாக்டர் சுதாகரன் ஆகியோர் போட்டியிட்டனர்.
வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் தி.மு.க. வேட்பாளர் வேலுசாமி முன்னிலையில் இருந்தார். 23 சுற்றுகள் முடிவில் அவர் 5,38,972 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். ஓட்டு விபரம் வருமாறு:-
தி.மு.க - 7,46,523
பா.ம.க. - 2,07,551
ம.நீ.ம. - 38,784
பெரும்பாலான தொகுதிகளில் பிரதான கட்சிகளை அடுத்த 3-ம் இடத்தை அ.ம.மு.க. பிடித்திருந்தது. சில தொகுதிகளில் 3-ம் இடத்தை மக்கள் நீதி மய்யமும், நாம் தமிழர் கட்சியும் கைப்பற்றி இருந்தன. அந்த வகையில் திண்டுக்கல் தொகுதியில் 3-ம் இடத்தை நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மன்சூர்அலிகான் பிடித்திருந்தார்.
ஏற்கனவே தேர்தல் பிரசாரத்தின் போது நூதன முறையில் சாலையோர வியாபாரிகளுடன் அமர்ந்தும், டீக்கடைகளில் டீ போட்டும், புரோட்டா கடைகளில் மாவு தயாரித்து கொடுத்ததும் பிரசாரம் செய்து பரபரப்பை ஏற்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X