search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டம் இல்லை - இஸ்ரோ தலைவர்
    X

    நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டம் இல்லை - இஸ்ரோ தலைவர்

    விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தை செயல்படுத்திய பின்னர்தான் நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டம் குறித்து பரிசீலிக்கப்படும் என்று இஸ்ரோ தலைவர் கே.சிவன் கூறினார்.
    ஆலந்தூர்:

    இஸ்ரோ தலைவர் கே.சிவன், சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பி.எஸ்.எல்.வி. சி-46 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டம் இல்லை. விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் திட்டம் உள்ளது. இந்த திட்டம் 2022-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 15-ந்தேதிக்குள் செயல்படுத்தப்படவேண்டும்.



    75-வது ஆண்டுக்குள் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தை செயல்படுத்திய பின்னர்தான் நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டம் குறித்து பரிசீலிக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×