search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இடைத்தேர்தல் வெற்றிக்காக பழனியில் குவிந்த அ.தி.மு.க., தி.மு.க. வேட்பாளர்கள்
    X

    இடைத்தேர்தல் வெற்றிக்காக பழனியில் குவிந்த அ.தி.மு.க., தி.மு.க. வேட்பாளர்கள்

    இடைத் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக பழனி முருகன் கோவிலில் அ.தி.மு.க., தி.மு.க. வேட்பாளர்கள் அணி அணியாக வந்தனர்.
    பழனி:

    தமிழகத்தில் நிலக்கோட்டை, அரவக்குறிச்சி உள்ளிட்ட 22 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இந்த தேர்தல் பாராளுமன்ற தேர்தல் தேர்தலை காட்டிலும் தமிழகத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஏனெனில் தமிழகத்தில் ஆட்சியை தொடரவும், புதிய ஆட்சியை அமைக்கவும் ஆளும் கட்சி, எதிர்க்கட்சிகளுக்கு ஒரு திறவுகோல் போல் உள்ளது.

    இந்நிலையில் பழனி முருகன் கோவிலுக்கு அரவக்குறிச்சி அ.தி.மு.க. வேட்பாளர் செந்தில்நாதன், தி.மு.க. வேட்பாளர் செந்தில்பாலாஜி ஆகியோர் தனித்தனியாக வந்தனர். பின்னர் அவர்கள் மாலையில் நடக்கும் சாயரட்சை பூஜையில் கலந்து கெண்டு சாமி தரிசனம் செய்தனர். இதனையடுத்து நிலக்கோட்டை தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் தேன்மொழி, தி.மு.க. வேட்பாளர் சவுந்தரபாண்டியன் ஆகியோரும் பழனி முருகன் கோவிலுக்கு தனித்தனியாக வந்து, சாமி தரிசனம் செய்தனர்.

    பழனி முருகன் கோவிலுக்கு ஒரே நேரத்தில் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி வேட்பாளர்கள் சாமி தரிசனம் செய்ய வந்தனர், தங்கள் தொகுதியில் வெற்றி பெறுவதற்காக வேண்டிக் கொண்டனர். செவ்வாய்க்கிழமை முருகனுக்கு உகந்த நாள் என்பதாலும், வைகாசி விசாகத்தின் கடைசி நாள் என்பதாலும் தேர்தல் வெற்றிக்காக வேட்பாளர்கள் வந்து சாமி தரிசனம் செய்தனர்.
    Next Story
    ×