search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதுவையில் ஓட்டு எண்ணிக்கை ஏற்பாடுகள் தீவிரம்
    X

    புதுவையில் ஓட்டு எண்ணிக்கை ஏற்பாடுகள் தீவிரம்

    புதுவையில் ஓட்டு எண்ணிக்கைக்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகளில் தேர்தல் துறை தீவிரமாக இறங்கியுள்ளது.
    புதுச்சேரி:

    புதுவை பாராளுமன்ற தொகுதிக்குள் அடங்கி உள்ள 23 சட்டசபை தொகுதிகளின் ஓட்டுகள் லாஸ்பேட்டை மோதிலால் நேரு அரசு பாலிடெக்னிக், மகளிர் பாலிடெக்னிக் ஆகிய இரு இடங்களில் எண்ணப்படுகிறது.

    காரைக்கால் அண்ணா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 5 தொகுதிகளுக்கான ஓட்டுகளும், மாகியில் ஜவகர்லால் நேரு அரசு மேல்நிலைப்பள்ளி, ஏனாமில் மினி சிவில் ஸ்டே‌ஷனிலுள்ள கருத்தரங்கு கூடம் ஆகியவற்றில் தலா ஒரு தொகுதிகளுக்கான ஓட்டுகளும் எண்ணப்படுகிறது.

    தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலுக்கான ஓட்டு எண்ணிக்கை மோதிலால் நேரு அரசு பாலிடெக்னிக்கில் தனி அறையில் எண்ணப்படுகிறது.

    மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்கள் மூன்றடுக்கு பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளது. ஓட்டு எண்ணும் மையங்களில் 15 இடத்தில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.

    ஓட்டு எண்ணிக்கைக்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகளில் தேர்தல் துறை தீவிரமாக இறங்கியுள்ளது.

    ஓட்டு எண்ணிக்கை அறைகள், டேபிள்கள் அமைப்பது, விளக்கு வசதி உள்ளிட்ட பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. 23-ந்தேதி காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்குகிறது. முதலில் தபால் ஓட்டுகளும் அடுத்து மின்னணு ஓட்டுப் பதிவு எந்திரத்தில் பதிவான ஓட்டுகளும் எண்ணப்படுகிறது.

    ஒவ்வொரு தொகுதியிலும் 5 விவிபாட் எந்திரங்களில் பதிவான ஓட்டுகளும் எண்ணப்படுகிறது. இதனால் ஓட்டு எண்ணிக்கை முடிவதற்கு 24 மணி நேரமாகும் என தேர்தல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    கடும் வெயிலின் காரணமாகவும், ஓட்டு எண்ணிக்கை கால தாமதத்தை கருத்தில் கொண்டும், ஓட்டு எண்ணிக்கை நடக்கும் அறைகளில் முழுவதுமாக ஏ.சி. வசதி செய்ய தேர்தல் துறை முடிவு செய்துள்ளது. இதற்காக ஓட்டு எண்ணிக்கை அறைகளில் ஏ.சி. பொருத்தும் பணி நடந்து வருகிறது.

    ஓட்டு எண்ணிக்கையை மேற்பார்வையிடவும், முறைகேடுகளை தடுக்கவும் 12 பேர் தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

    Next Story
    ×