என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அயனாவரத்தில் மளிகை கடையை உடைத்து ரூ.40 ஆயிரம் கொள்ளை
Byமாலை மலர்19 May 2019 8:00 AM GMT (Updated: 19 May 2019 8:00 AM GMT)
அயனாவரத்தில் மளிகை கடையை உடைத்து ரூ.40 ஆயிரம் கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அம்பத்தூர்:
அயனாவரம் பாளையம் பிள்ளை நகரை சேர்ந்தவர் கோபி. இவர் அதே பகுதியில் துரைசாமி தெருவில் மளிகை கடை வைத்துள்ளார்.
நேற்று இரவு இவர் வழக்கம்போல் கடையை மூடிவிட்டு சென்றார். இன்று காலை கடையை திறக்க வந்தபோது ஷட்டர் உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உள்ளே சென்று பார்த்த போது கல்லாவிலிருந்த சீட்டு பணம் ரூ.40,000 மற்றும் மளிகை பொருட்களை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்று இருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து அயனாவரம் போலீஸ் நிலையத்தில் கோபி புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அயனாவரம், ஐ.சி.எப்., வில்லிவாக்கம் பகுதியில் இரவு நேரங்களில் பூட்டி உள்ள கடைகளை நோட்டமிட்டு மர்ம நபர்கள் கொள்ளையடித்து செல்லும் சம்பவம் வியாபாரிகளிடடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X