search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது மக்கள் நீதி மய்யம் தேர்தல் ஆணையத்தில் புகார்
    X

    அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது மக்கள் நீதி மய்யம் தேர்தல் ஆணையத்தில் புகார்

    சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என கமல்ஹாசன் சொன்னதற்கு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கடுமையாக விமர்சித்தார். இதையடுத்து மக்கள் நீதி மய்யம், அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளனர்.
    சென்னை:

    நடிகர் கமல்ஹாசன் சமீபத்தில் அரவக்குறிச்சி தொகுதியில் பிரசாரம் செய்தபோது, முஸ்லிம்கள் அதிகம் வாழும் பள்ளப்பட்டி என்ற ஊரில் பேசுகையில் இந்து தீவிரவாதம் என்பது பற்றி குறிப்பிட்டு பேசினார்.

    இதற்கு கண்டனம் தெரிவித்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, ‘கமல்ஹாசன் நாக்கை மக்கள் அறுப்பார்கள்’ என்று முதல் ஆளாக எச்சரித்து கடுமையாக விமர்சித்தார்.

    இதனையடுத்து மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள், தேர்தல் ஆணையம் சென்று தலைமை தேர்தல் அதிகாரியை சந்தித்து அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது இன்று  புகார் கொடுத்தனர்.

    இந்த புகார் மனுவில், ‘அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மக்களை வன்முறைக்கு தூண்டும் வகையில் பேசியுள்ளார். அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என குறிப்பிடப்பட்டுள்ளது.



    Next Story
    ×