என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வீட்டின் முன்பு விளையாடிய குழந்தையை கடத்த முயற்சி - சேலத்தில் பரபரப்பு
Byமாலை மலர்14 May 2019 6:46 AM GMT (Updated: 14 May 2019 6:46 AM GMT)
சேலத்தில் வீட்டின் முன்பு விளையாடிய குழந்தையை ஒரு பெண் கடத்த முயன்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சேலம்:
சேலம் ஜான்சன்பேட்டை கிழக்கு தெரு பகுதியை சேர்ந்தவர் ஜஸ்டின்(வயது 35). கூலித்தொழிலாளி. இவரது மனைவி மீனாட்சி. இவர்களுக்கு நிவேதா(9), சரவணன்(3) என்ற 2 குழந்தைகள் உள்ளது.
இந்நிலையில் அந்த பகுதியில் 10 நாட்களாக ஒரு பெண் சுற்றி திரிந்தார். நேற்று அந்த பெண் ஜஸ்டின் வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த நிவேதாவை அழைத்து சென்றுள்ளார். இதை பார்த்த அந்த பகுதி பொதுமக்கள் குழந்தையை மீட்டு அந்த பெண்ணை விரட்டி விட்டனர். இன்று காலை அதே பெண் ஜஸ்டின் வீட்டிற்கு சென்று நிவேதாவிடம் எனது குழந்தையை கொடு என்று கூறி அங்கு விளையாடிகொண்டிருந்த சரவணனை கடத்த முயன்றார்.
இதனால் பயந்துபோன நிவேதா உறவினர்களிடம் தகவல் கூறினார். உடனே அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் திரண்டு குழந்தையை மீட்டு அந்த பெண்ணை பிடித்து குழந்தையை மீட்டனர். பின்னர் அந்த பெண்ணை பொதுமக்கள் பிடித்து தாக்கினர். இதுகுறித்து அஸ்தம்பட்டி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அந்த பெண்ணை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் யார் என்று தெரியவில்லை, சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர் என்று தெரிவித்தனர்.
தற்போது குழந்தை கடத்தல் சம்பவம் பல்வேறு பகுதிகளில் நடப்பதால், சேலத்தில் குழந்தையை கடத்த முயன்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சேலம் ஜான்சன்பேட்டை கிழக்கு தெரு பகுதியை சேர்ந்தவர் ஜஸ்டின்(வயது 35). கூலித்தொழிலாளி. இவரது மனைவி மீனாட்சி. இவர்களுக்கு நிவேதா(9), சரவணன்(3) என்ற 2 குழந்தைகள் உள்ளது.
இந்நிலையில் அந்த பகுதியில் 10 நாட்களாக ஒரு பெண் சுற்றி திரிந்தார். நேற்று அந்த பெண் ஜஸ்டின் வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த நிவேதாவை அழைத்து சென்றுள்ளார். இதை பார்த்த அந்த பகுதி பொதுமக்கள் குழந்தையை மீட்டு அந்த பெண்ணை விரட்டி விட்டனர். இன்று காலை அதே பெண் ஜஸ்டின் வீட்டிற்கு சென்று நிவேதாவிடம் எனது குழந்தையை கொடு என்று கூறி அங்கு விளையாடிகொண்டிருந்த சரவணனை கடத்த முயன்றார்.
இதனால் பயந்துபோன நிவேதா உறவினர்களிடம் தகவல் கூறினார். உடனே அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் திரண்டு குழந்தையை மீட்டு அந்த பெண்ணை பிடித்து குழந்தையை மீட்டனர். பின்னர் அந்த பெண்ணை பொதுமக்கள் பிடித்து தாக்கினர். இதுகுறித்து அஸ்தம்பட்டி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அந்த பெண்ணை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் யார் என்று தெரியவில்லை, சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர் என்று தெரிவித்தனர்.
தற்போது குழந்தை கடத்தல் சம்பவம் பல்வேறு பகுதிகளில் நடப்பதால், சேலத்தில் குழந்தையை கடத்த முயன்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X