search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சுரண்டையில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை - 3 போலீஸ்காரர்கள் ‘சஸ்பெண்டு’
    X

    சுரண்டையில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை - 3 போலீஸ்காரர்கள் ‘சஸ்பெண்டு’

    சுரண்டையில் கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில் 3 போலீஸ்காரர்கள் சஸ்பெண்டு செய்யப்பட்டனர்.
    நெல்லை:

    நெல்லை மாவட்டம் சுரண்டையில் அரசு கலைக்கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் பாதுகாப்புக்காக சென்ற 2 போலீஸ்காரர்கள் அங்குள்ள மாணவிகளிடம் செல்போன் நம்பரை பெற்று ஆபாசமாக பேசி பாலியல் தொல்லை கொடுத்ததாக பரபரப்பு புகார் கூறப்பட்டது. இதுதொடர்பாக கல்லூரி மாணவிகள் நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் சக்திகுமாரிடம் புகார் செய்தனர்.

    இதைத்தொடர்ந்து நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண்சக்திகுமார் போலீஸ்காரர்களான வெள்ளாளங்குளத்தைச் சேர்ந்த முருகேசன், வீரகேரளம்புதூரைச் சேர்ந்த கண்ணன் மற்றும் இவர்களுக்கு உடந்தையாக இருந்த பெண் போலீஸ் சரஸ்வதி ஆகிய 3 பேரையும் இடமாற்றம் செய்து உத்தரவிட்டார்.

    மேலும் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க ஆலங்குளம் துணைபோலீஸ் சூப்பிரண்டு சுபாஷினிக்கு உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து அவர் சம்பந்தப்பட்ட மாணவிகளிடமும், போலீஸ்காரர்களிடமும் விசாரணை நடத்தினார். மேலும் அவர்களின் செல்போனையும் ஆய்வு செய்தார்.

    இதைத்தொடர்ந்து அவர் நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண்சக்திகுமாரிடம் அறிக்கை சமர்ப்பித்தார்.

    அதன் அடிப்படையில் சம்பந்தப்பட்ட போலீஸ் காரர்களான முருகேசன், கண்ணன், சரஸ்வதி ஆகிய 3 பேரையும் ‘சஸ்பெண்டு’ செய்து நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் சக்திகுமார் உத்தரவிட்டார்.

    கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில் 3 போலீஸ்காரர்கள் சஸ்பெண்டு செய்யப்பட்ட இந்த சம்பவம் நெல்லை மாவட்ட போலீசார் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    Next Story
    ×