என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
எனக்கு உதவுவது போல் நடித்து பாலியல் பலாத்காரம் செய்தார்- ஈரோடு தொழில் அதிபர் மீது புகார்
Byமாலை மலர்3 May 2019 5:10 AM GMT (Updated: 3 May 2019 5:10 AM GMT)
தனக்கு உதவுவது போல் நடித்து பாலியல் பலாத்காரம் செய்ததாக ஈரோடு தொழில் அதிபர் மீது பெண் ஒருவர் போலீசில் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
ஈரோடு:
ஈரோடு வில்லரசம் பட்டியை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் ராதாகிருஷ்ணன் என்பவர் மீது ஈரோடு வீரப்பன் சத்திரத்தை சேர்ந்த பெண் ஒருவர் பாலியல் பலாத்காரம் புகார் கூறியிருந்தார்.
தன்னை செல்போனில் ஆபாசமாக படம் எடுத்து மிரட்டி 4 ஆண்டுகளாக பாலியல் பலாத்காரம் செய்து விட்டதாக கூறியிருந்தார். இதை குறித்து ஈரோடு அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் மேற்கொண்ட புகார் உண்மை என தெரிய வந்தது.
இதன்பேரில் ரியல் எஸ்டேட் அதிபர் ராதாகிருஷ்ணன் மீது 4 பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து தற்போது சிறையில் அடைத்துள்ளனர். ராதாகிருஷ்ணன் மேலும் சில பெண்களிடம் இதே போன்று பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டுள்ளதாக பரபரப்பான தகவல் வெளிவந்தன.
இந்த சூழ்நிலையில் ஈரோடு எஸ்பி அலுவலகத்திற்கு வீரப்பன் சத்திரம் பகுதியைச் சேர்ந்த மேலும் பெண் ஒருவர் வந்து தொழில் அதிபர் ராதாகிருஷ்ணன் தன்னை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ததாக பரபரப்பு புகார் மனு ஒன்றை கொடுத்தார்.
எனக்கு கடந்த 5 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. எனக்கு ஒரு மகனும் மகளும் உள்ளனர். என் கணவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது.
மதுக்கடையில் வைத்து எனது கணவருக்கும் ராதாகிருஷ்ணனுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அதைக் காரணமாக வைத்து அவர் அடிக்கடி எங்க வீட்டுக்கு வருவார். எனக்கும் என் கணவருக்கும் இடையே பிரச்சனை ஏற்படுத்தி சமாதானப்படுத்தி வைத்தார். என் ஏழ்மையான சூழ்நிலையை புரிந்துகொண்டு எனக்கு உதவுவது போல் என் வீட்டுக்கு அடிக்கடி வரத் தொடங்கினார்.
இந்நிலையில் ஒருநாள் திடீரென ராதாகிருஷ்ணன்? என்னை பாலியல் பலாத்காரம் செய்தார். தொடர்ந்து என்னை மிரட்டி பலாத்காரம் செய்து வந்தார். இதை வெளியே சொல்ல முடியாமல் தவித்து வந்தேன். தற்போது ராதாகிருஷ்ணன் பற்றிய செய்தியை பார்த்தேன். அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.
ரியல் எஸ்டேட் அதிபர் ராதாகிருஷ்ணன் இதேபோன்று பல பெண்களை தனது வலையில் வீழ்த்தியிருக்கக்கூடும் என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி வருகின்றனர். ஏற்கனவே பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் புகாரில் “ராதாகிருஷ்ணன் என்னை போன்று பல பெண்களை மிரட்டி கற்பழித்துள்ளார்” என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் மேலும் ஒரு பெண் அவர் மீது பாலியல் புகார் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
போலீசார் ராதாகிருஷ்ணன் பயன்படுத்திய செல்போனில் ஏதேனும் ஆபாச வீடியோக்கள் உள்ளதா? அல்லது ஆபாச வீடியோக்களை அவர் அழித்தாரா? என்பது குறித்து தீவிரமாக ஆராய்ந்து வருகின்றனர்.
இதேபோன்று ராதாகிருஷ்ணனால் பாதிக்கப்பட்ட மேலும் சில பெண்கள் புகார் கொடுக்க இன்று வரக்கூடும் என்ற பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.
ஈரோடு வில்லரசம் பட்டியை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் ராதாகிருஷ்ணன் என்பவர் மீது ஈரோடு வீரப்பன் சத்திரத்தை சேர்ந்த பெண் ஒருவர் பாலியல் பலாத்காரம் புகார் கூறியிருந்தார்.
தன்னை செல்போனில் ஆபாசமாக படம் எடுத்து மிரட்டி 4 ஆண்டுகளாக பாலியல் பலாத்காரம் செய்து விட்டதாக கூறியிருந்தார். இதை குறித்து ஈரோடு அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் மேற்கொண்ட புகார் உண்மை என தெரிய வந்தது.
இதன்பேரில் ரியல் எஸ்டேட் அதிபர் ராதாகிருஷ்ணன் மீது 4 பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து தற்போது சிறையில் அடைத்துள்ளனர். ராதாகிருஷ்ணன் மேலும் சில பெண்களிடம் இதே போன்று பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டுள்ளதாக பரபரப்பான தகவல் வெளிவந்தன.
இந்த சூழ்நிலையில் ஈரோடு எஸ்பி அலுவலகத்திற்கு வீரப்பன் சத்திரம் பகுதியைச் சேர்ந்த மேலும் பெண் ஒருவர் வந்து தொழில் அதிபர் ராதாகிருஷ்ணன் தன்னை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ததாக பரபரப்பு புகார் மனு ஒன்றை கொடுத்தார்.
எனக்கு கடந்த 5 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. எனக்கு ஒரு மகனும் மகளும் உள்ளனர். என் கணவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது.
மதுக்கடையில் வைத்து எனது கணவருக்கும் ராதாகிருஷ்ணனுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அதைக் காரணமாக வைத்து அவர் அடிக்கடி எங்க வீட்டுக்கு வருவார். எனக்கும் என் கணவருக்கும் இடையே பிரச்சனை ஏற்படுத்தி சமாதானப்படுத்தி வைத்தார். என் ஏழ்மையான சூழ்நிலையை புரிந்துகொண்டு எனக்கு உதவுவது போல் என் வீட்டுக்கு அடிக்கடி வரத் தொடங்கினார்.
இந்நிலையில் ஒருநாள் திடீரென ராதாகிருஷ்ணன்? என்னை பாலியல் பலாத்காரம் செய்தார். தொடர்ந்து என்னை மிரட்டி பலாத்காரம் செய்து வந்தார். இதை வெளியே சொல்ல முடியாமல் தவித்து வந்தேன். தற்போது ராதாகிருஷ்ணன் பற்றிய செய்தியை பார்த்தேன். அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.
ரியல் எஸ்டேட் அதிபர் ராதாகிருஷ்ணன் இதேபோன்று பல பெண்களை தனது வலையில் வீழ்த்தியிருக்கக்கூடும் என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி வருகின்றனர். ஏற்கனவே பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் புகாரில் “ராதாகிருஷ்ணன் என்னை போன்று பல பெண்களை மிரட்டி கற்பழித்துள்ளார்” என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் மேலும் ஒரு பெண் அவர் மீது பாலியல் புகார் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
போலீசார் ராதாகிருஷ்ணன் பயன்படுத்திய செல்போனில் ஏதேனும் ஆபாச வீடியோக்கள் உள்ளதா? அல்லது ஆபாச வீடியோக்களை அவர் அழித்தாரா? என்பது குறித்து தீவிரமாக ஆராய்ந்து வருகின்றனர்.
இதேபோன்று ராதாகிருஷ்ணனால் பாதிக்கப்பட்ட மேலும் சில பெண்கள் புகார் கொடுக்க இன்று வரக்கூடும் என்ற பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X