என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சிவகங்கை அருகே கியாஸ் சிலிண்டர் வெடித்து தாய்-2 குழந்தைகள் பலி
Byமாலை மலர்1 May 2019 7:01 AM GMT (Updated: 1 May 2019 7:01 AM GMT)
சிவகங்கை அருகே இன்று காலை கியாஸ் சிலிண்டர் வெடித்த விபத்தில் தாய் மற்றும் 2 குழந்தைகள் உடல் சிதறி பரிதாபமாக இறந்தனர்.
சிவகங்கை:
சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூர் அருகே உள்ள கே.உத்தம்பட்டியைச் சேர்ந்தவர் கருப்பையா. வெளிநாட்டில் வேலை பார்க்கும் இவர் சமீபத்தில் ஊர் திரும்பினார். இவரது மனைவி சின்னம்மாள் (வயது29). இவர்களது மகன் வீரன் (5), மகள் திவ்ய வர்ஷினி (3).
இன்று காலை சின்னம்மாள் வீட்டில் சமையல் செய்வதற்காக கியாஸ் அடுப்பை பற்ற வைத்தார். அப்போது கியாஸ் கசிவு இருந்ததை அவர் அறியவில்லை.
அடுப்பை பற்ற வைத்த உடனேயே கியாஸ் சிலிண்டர் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதில் சின்னம்மாள் மற்றும் அவரது அருகில் நின்று கொண்டிருந்த வீரன், திவ்ய வர்ஷினி ஆகிய 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர்.
ரத்த வெள்ளத்தில் மிதந்த அவர்கள் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உடல் சிதறி பரிதாபமாக இறந்தனர்.
தகவல் அறிந்ததும் புழுதிபட்டி போலீசார் சம்பவ இடம் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் 3 பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிங்கம்புணரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
கியாஸ் சிலிண்டர் வெடித்த சமயத்தில் கருப்பையா வெளியே சென்றிருந்ததால் உயிர் பிழைத்தார்.
கியாஸ் சிலிண்டர் வெடித்து ஒரே வீட்டில் 3 பேர் இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூர் அருகே உள்ள கே.உத்தம்பட்டியைச் சேர்ந்தவர் கருப்பையா. வெளிநாட்டில் வேலை பார்க்கும் இவர் சமீபத்தில் ஊர் திரும்பினார். இவரது மனைவி சின்னம்மாள் (வயது29). இவர்களது மகன் வீரன் (5), மகள் திவ்ய வர்ஷினி (3).
இன்று காலை சின்னம்மாள் வீட்டில் சமையல் செய்வதற்காக கியாஸ் அடுப்பை பற்ற வைத்தார். அப்போது கியாஸ் கசிவு இருந்ததை அவர் அறியவில்லை.
அடுப்பை பற்ற வைத்த உடனேயே கியாஸ் சிலிண்டர் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதில் சின்னம்மாள் மற்றும் அவரது அருகில் நின்று கொண்டிருந்த வீரன், திவ்ய வர்ஷினி ஆகிய 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர்.
ரத்த வெள்ளத்தில் மிதந்த அவர்கள் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உடல் சிதறி பரிதாபமாக இறந்தனர்.
தகவல் அறிந்ததும் புழுதிபட்டி போலீசார் சம்பவ இடம் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் 3 பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிங்கம்புணரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
கியாஸ் சிலிண்டர் வெடித்த சமயத்தில் கருப்பையா வெளியே சென்றிருந்ததால் உயிர் பிழைத்தார்.
கியாஸ் சிலிண்டர் வெடித்து ஒரே வீட்டில் 3 பேர் இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X