search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இலங்கைகுண்டு வெடிப்பு எதிரொலி: சேலம் ரெயில் நிலையத்தில் போலீசார் அதிரடி சோதனை
    X

    இலங்கைகுண்டு வெடிப்பு எதிரொலி: சேலம் ரெயில் நிலையத்தில் போலீசார் அதிரடி சோதனை

    இலங்கைகுண்டு வெடிப்பு எதிரொலியால் சேலம் ரெயில் நிலையத்தில் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். #SrilankanBlasts

    சேலம்:

    இலங்கையில் கடந்த 21-ந் தேதி ஈஸ்டர் பண்டிகையின் போது கிறிஸ்தவ தேவாலயங்கள், ஓட்டல்களில் குண்டுகள் வெடித்ததில் அப்பாவி மக்கள் பலியானார்கள்.

    இதனைத் தொடர்ந்து இந்தியாவிலும் உஷார் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. தமிழகத்திலும் போலீசார் உஷார்படுத்தப்பட்டனர்.

    சென்னையில் நேற்று ரெயில் நிலையங்களில் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து சேலத்தில் உள்ள முக்கிய பகுதிகளிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் இன்று காலை சேலம் ஜங்சன் ரெயில் நிலையத்தில் இலங்கையை போன்று அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கும் வகையில் ரெயில்வே போலீசாரும், பாதுகாப்பு படை போலீசாரும் சோதனையில் ஈடுபட்டனர்.

    ரெயில் நிலைய நுழைவு வாயில் மற்றும் பிளாட் பாரங்களில் ரெயில்வே டி.எஸ்.பி. பாலகிருஷ்ணன் தலைமையில் இன்ஸ்பெக்டர் இளவரசி, சப்-இன்ஸ்பெக்டர்கள் சந்தானம், பாலமுருகன், ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் 50-க்கும் மேற்பட்டோர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பயணிகளின் உடைமைகளை மெட்டல் டிடெக்டர் மூலம் வெடிகுண்டு சோதனை நடத்தப்பட்டது.

    அப்போது பெங்களூருவில் இருந்து கோவை சென்ற இண்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயிலில் பெட்டிகளில் ஏறி போலீசார் சோதனை மேற்கொண்டனர். மேலும் நுழைவு வாயில்களில் போலீசார் குவிக்கப்பட்டனர்.

    இந்த சோதனை மதியம் வரை நடைபெற்றது. அங்கு வரும் அனைத்து ரெயில்களிலும் சோதனை செய்யப்பட்டது.

    போலீசாரின் திடீர் சோதனையால் பயணிகள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது. #SrilankanBlasts

    Next Story
    ×