search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பொன்னமராவதியில் இரு தரப்பினர் பயங்கர மோதல்- போலீசார் மீது கற்கள் வீசி தாக்குதல்
    X

    பொன்னமராவதியில் இரு தரப்பினர் பயங்கர மோதல்- போலீசார் மீது கற்கள் வீசி தாக்குதல்

    பொன்னமராவதியில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலின்போது போலீசார் மீது கற்கள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டதால் பதற்றம் ஏற்பட்டது. #PonnamaravathiViolence
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் இரு சமுதாயத்தினருக்கிடையே இன்று கடுமையான மோதல் ஏற்பட்டது. ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர். இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று மோதலில் ஈடுபட்டவர்களை விரட்டியடித்தனர்.

    அப்போது கலைந்துசென்ற நபர்கள், திடீரென கற்களை வீசி போலீசாரை நோக்கி  தாக்கினர். இதில் 2 காவலர்கள் உள்ளிட்ட 3 பேர் காயமடைந்தனர். போலீசாரின் 3 வாகனங்களும் சேதமடைந்தன. இதையடுத்து போலீசார் தடியடி நடத்தி விரட்டியடித்தனர். திருச்சி சரக டிஐஜி லலிதாலெட்சுமி சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார். 

    இந்த மோதல் காரணமாக அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவுகிறது. கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். #PonnamaravathiViolence
     
    Next Story
    ×