search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வேதாரண்யத்தில் திடீர் இடியுடன் மழை: மின்னல் தாக்கி 14 பேர் காயம்
    X

    வேதாரண்யத்தில் திடீர் இடியுடன் மழை: மின்னல் தாக்கி 14 பேர் காயம்

    வேதாரண்யத்தில் இன்று அதிகாலையில் திடீரென மழை பெய்தது. அப்போது வீடுகளில் மின்னல் தாக்கி 14 பேர் காயம் அடைந்தனர்.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகாவில் கடந்த 2 மாதங்களாக கடுமையான வெயில் வாட்டி வந்தது. இந்த நிலையில் இன்று அதிகாலையில் 3 மணிக்கு ஆயக்காரன்புலம் செட்டியார் குத்தகையில் திடீரென மழை பெய்தது.

    அப்பகுதியில் ஒரு சில கூரை வீடுகளில் மின்னல் தாக்கியது. அப்போது வீட்டில் தூங்கி இருந்த வீரமணி மற்றும் சந்திரா இருவரும் காயம் ஏற்பட்டது. மேலும் அடுத்தடுத்த வீடுகளில் தூங்கி கொண்டிருந்த 12 பேர் லேசான காயம் அடைந் தனர்.

    மின்னல் தாக்கிய 14 பேரும் வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்க பட்டனர் மின்னல் தாக்கியதில் வீடுகளில் இருந்த மிக்சி மற்றும் டி.வி. உள்ளிட்ட மின்சார பொருட்கள் சேதம் அடைந்தன.

    இதேபோல் தஞ்சை மாவட்டம் மதுக்கூரில் இன்று அதிகாலை 4 மணியளவில் மழை பெய்தது. மேலும் மதுக்கூர் சுற்றியுள்ள கிராம பகுதிகளில் லேசான மழை பெய்தது.

    கடந்த 2 மாதங்களாக வெயிலில் தவித்து வந்த மககள், திடீரென பெய்த மழையால் மகிழ்ச்சி அடைந்தனர். மழையால் அப்பகுதியில் இதமான சீதோஷ்ண நிலை நிலவியது.

    Next Story
    ×