search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முதல் முறையாக ஓட்டுபோட்டது மகிழ்ச்சியாக உள்ளது - மாணவிகள் பேட்டி
    X

    முதல் முறையாக ஓட்டுபோட்டது மகிழ்ச்சியாக உள்ளது - மாணவிகள் பேட்டி

    முதல் முறையாக ஓட்டுபோட்டது மகிழ்ச்சியாக உள்ளது என்று தர்மபுரி கல்லூரி மாணவிகள் கூறினர்.
    தர்மபுரி:

    தர்மபுரி சின்னசாமி கவுடு தெருவை சேர்ந்த மாணவி நீரா கூறியதாவது:-

    திருச்செங்கோடு பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.இ. முதலாம் ஆண்டு படித்து வருகிறேன். நான் முதல் முதலில் இன்று காலை அதியமான் அரசு ஆண்கள் மேல்நிலைபள்ளியில் வரிசையில் நின்று வாக்களித்தேன். எனக்கு முதல் முதலில் வாக்களிப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. மேலும் அனைவரும் தவறாமல் வந்து வாக்களிக்க வேண்டும். மேலும் இந்த தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் மக்களுக்கு நல்ல திட்டங்கள் கொண்டு வந்து பயனுள்ளதாக அமைய பாடுபட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தர்மபுரி நெடுமாறன் நகர் பகுதியை சேர்ந்த மாணவி இனியா கூறியதாவது:-

    தர்மபுரியில் உள்ள தனியார் கல்லூரியில் எம்.எஸ்.சி. படித்து வருகிறேன். நான் தேர்தல் முதல் முதலில் வாக்களிப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. காலையில் வந்து வரிசையில் நின்று வாக்களித்துள்ளேன். இது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    மேலும் இதேபோல் பொதுமக்கள் 100 சதவீதம் வந்து வாக்களிக்க வேண்டும். தர்மபுரி மாவட்டத்தில் தண்ணீர் பிரச்சனை உள்ளதால் அதற்கு தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் குடிநீர் பிரச்சனையை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×