search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கிருஷ்ணகிரி-தர்மபுரி எம்.பி. தொகுதிகளில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு
    X

    கிருஷ்ணகிரி-தர்மபுரி எம்.பி. தொகுதிகளில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு

    கிருஷ்ணகிரி, தர்மபுரி எம்.பி. தொகுதியில் விறுவிறுப்பான ஓட்டுப்பதிவு நடந்து வருகிறது. #LokSabhaElections2019
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி, ஓசூர், போச்சம்பள்ளி, மத்தூர், ஊத்தங்கரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மக்கள் ஆர்வத்துடன் வந்து ஓட்டு போட்டனர்.

    மாற்றுத்திறனாளிகள் ஓட்டளிக்க சக்கர நாற்காலிகள் தயாராக இருந்தன. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மொத்தம் 1800 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தன.

    சில இடங்களில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பழுதானாலும் உடனடியாக சரிசெய்யப்பட்டு ஓட்டுப்பதிவு தொடங்கியது.

    சூளகிரி உள்ளிட்ட பகுதிகளில் முஸ்லீம்கள் ஆர்வத்துடன் ஓட்டு போட்டனர்.

    தர்மபுரி மாவட்டத்தில் மொத்தம் 1787 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தன. தேர்தல் பணியில் 6 ஆயிரத்திற்கு மேற்பட்ட ஊழியர்களும், பாதுகாப்பு பணியில் 2606 போலீசாரும் ஈடுபட்டனர்.

    வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. பெண்களும், ஆண்களும் நீண்ட வரிசையில் நின்று ஓட்டு போட்டனர். மிக உயரமான வாக்குச்சாவடியாக பென்னாகரத்தை அடுத்த அலக்கட்டு, கோட்டூர்மலையில் அமைக்கப்பட்டு இருந்தது. இங்கு கழுதை மூலம் வாக்குப்பதிவு எந்திரம் கொண்டு செல்லப்பட்டு ஓட்டுப்பதிவு நடந்தது.

    பென்னாகரம் அடுத்த தாளக்குலம் வாக்குச்சாவடியில் காலை 6 மணிக்கே வாக்காளர்கள் ஆர்வத்துடன் காத்திருந்தனர்.

    தர்மபுரியில் அதியமான் கோட்டை அரசு பள்ளிகளில் ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளிகளில் வாக்காளர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.

    ஓசூர் சட்டமன்ற இடைத்தேர்தலில் இன்று விறுவிறுப்பான ஓட்டுப்பதிவு நடந்தது. கர்நாடக எல்லையில் உள்ள ஓசூர், தளி உள்ளிட்ட பகுதிகளில் தமிழ் மட்டும் அல்ல கன்னடத்திலும் வாக்குச் சீட்டு அச்சடிக்கப்பட்டு இருந்தது. காலை 9 மணி நிலவரப்படி 9 சதவீதம் ஓட்டு பதிவாகி இருந்தது.

    அரூர் மற்றும் பாப்பி ரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிகளிலும் இன்று இடைத் தேர்தல் நடந்தது. விறுவிறுப்பாக ஓட்டுப்பதிவு நடந்து வருகிறது. #LokSabhaElections2019

    Next Story
    ×