search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வாக்குப்பதிவு எந்திரம் பழுதால் 1 மணி நேரம் காத்து நின்ற அமமுக வேட்பாளர்
    X

    வாக்குப்பதிவு எந்திரம் பழுதால் 1 மணி நேரம் காத்து நின்ற அமமுக வேட்பாளர்

    ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் வாக்குப்பதிவு எந்திரத்தில் ஏற்பட்ட பழுதால் 1 மணி நேரம் காத்து நின்று அ.ம.மு.க. வேட்பாளர் புவனேஸ்வரன் வாக்களித்தார். #Loksabhaelections2019

    தூத்துக்குடி, ஏப். 18-

    தமிழகத்தில் இன்று பாராளுமன்ற தேர்தல் நடந்து வருகிறது. இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்துள்ளது. தமிழகத்தில் பல்வேறு வாக்குச்சாவடி மையங்களில் வாக்குப்பதிவு எந்திரங்கள் பழுதானதால் சிறிது நேரம் தாமதத்திற்கு பின்னர் வாக்குப்பதிவு தொடங்கியது.

    தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட ஸ்ரீவைகுண்டம் சட்டமன்றம் ஆழ்வார்தோப்பில் அமைக்கப்பட்டுள்ள பள்ளியில் வாக்களிப்பதற்காக தூத்துக்குடி அ.ம.மு.க. வேட்பாளர் புவனேஸ்வரன் வந்தார். அப்போது அங்கு வைக்கப்பட்டிருந்த வாக்குப்பதிவு எந்திரத்தில் பழுது ஏற்பட்டது. இதனால் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது. பின்னர் என்ஜினியர்கள் வரவழைக்கப்பட்டு எந்திரத்தில் ஏற்பட்ட பழுது சரிசெய்யப்பட்டது. இதையடுத்து சுமார் ஒரு மணி நேரம் காத்து நின்ற வேட்பாளர் புவனேஷ்வரன் வாக்களித்து சென்றார்.

    Next Story
    ×