search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நீலகிரி தொகுதியில் மாவோயிஸ்டு நடமாட்டத்தை தடுக்க நக்சல் தடுப்பு போலீசார் கண்காணிப்பு
    X

    நீலகிரி தொகுதியில் மாவோயிஸ்டு நடமாட்டத்தை தடுக்க நக்சல் தடுப்பு போலீசார் கண்காணிப்பு

    நீலகிரி தொகுதியில் மாவோயிஸ்டு நடமாட்டத்தை தடுக்க நக்சல் தடுப்பு போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். #Maoist

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் 3 மாநில எல்லையில் அமைந்துள்ளது. 16 எல்லையோர சோதனை சாவடிகள் உள்ளன. நாளை பாராளுமன்ற தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு அனைத்து சோதனை சாவடிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கேரளாவின் மலப்புரம், வயநாடு, பாலக்காடு மற்றும் கர்நாடகாவின் சாம்ராஜ் நகர் ஆகிய பகுதிகள் நீலகிரி மாவட்டத்தின் எல்லையோரத்தில் அமைந்துள்ளன.

    நீலகிரி மாவட்டத்தின் எல்லையோரத்தில் அமைந்துள்ள பகுதிகளில் மாவோயிஸ்ட்டுகள் நடமாட்டம் உள்ள நிலையில், நீலகிரி மாவட்டத்தில் உள்ள மக்கள் குறிப்பாக பழங்குடியின மக்கள் தைரியமாக வாக்களிக்க வேண்டும் என்ற நம்பிக்கையை உருவாக்கும் வகையிலும், தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என யாரேனும் மக்களை அணுகிடுவதை தவிர்க்கும் வகையிலும், எக்காரணத்தை கொண்டும் தேர்தலை புறக்கணிக்க கூடாது என்பதை வலியுறுத்தும் விதமாக அதிரடிபடையினர் மற்றும் நக்சல் தடுப்பு பிரிவினர் பழங்குடியினர் கிராமங்கள் உள்ளிட்ட அனைத்து கிராமங்களுக்கும் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.

    கேரளாவில் ஜலீல் என்ற மாவோயிஸ்டு சுட்டுக் கொல்லப்பட்டதும் மாவோயிஸ்டுகள் தேர்தலை புறக்கணிக்க கோரி பல இடங்களில் போஸ்டர்கள் ஓட்டினார்கள். நீலகிரி மாவட்டத்துக்குள் அவர்கள் நுழைந்து மக்களை அச்சுறுத்த கூடாது என்பதற்காத 200 அதிரடிப்படையினர், நக்சல் தடுப்பு பிரிவில் 50 பேரும், கமாண்டோ பயிற்சி முடித்த 44 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    முக்கிய இடங்களில் அவர்கள் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். சுமார் 240 கி.மீ., தூரம் மாவட்ட எல்லை சீல் வைக்கப்பட்டு கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. தேர்தல் பாதுகாப்பு பணிக்காக சி.ஆர்.பி.எப்., ஒரு கம்பெனி, தமிழ்நாடு சிறப்பு காவல் படை ஒரு கம்பெனியினர் வந்துள்ளனர்.

    இது தவிர உள்ளூர் போலீசார் 1400 பேர் தேர்தல் பணியில் ஈடுபட்டு உள்ளனர். நீலகிரி தொகுதியை பொறுத்த வரை 78 பதட்டமான வாக்குசாவடிகள் உள்ளன. அங்கு சி.ஆர்.பி.எப்., படையினர் மற்றும் ஆயுதப்படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். #Maoist

    Next Story
    ×