search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பழனியில் குதிரை வண்டி ஓட்டி மன்சூர்அலிகான் பிரசாரம்
    X

    பழனியில் குதிரை வண்டி ஓட்டி மன்சூர்அலிகான் பிரசாரம்

    பழனியில் குதிரை வண்டி ஓட்டி மன்சூர் அலிகான் பிரசாரம் செய்து வருவது பொதுமக்களை கவர்ந்துள்ளது. #mansooralikhan

    பழனி:

    திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளராக நடிகர் மன்சூர்அலிகான் போட்டியிடுகிறார்.

    திண்டுக்கல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் குழந்தைகளை தாலாட்டுவது, வளைகாப்பு வீட்டுக்கு செல்வது, புரோட்டா செய்வது, பஞ்சர் ஒட்டுவது என வித்தியாசமான முறையில் பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார்.

    திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட பழனியில் வித்தியாசமான முறையில் மன்சூர்அலிகான் வாக்கு சேகரித்தது பொதுமக்களை கவர்ந்தது. உழவர் சந்தை, ஆர்.சி. சர்ச் பகுதியில் பாட்டு பாடி பிரசாரம் மேற்கொண்டார்.

    பின்னர் பஸ் நிலையம் அருகே குதிரை வண்டி ஓட்டி வாக்கு சேகரித்தார். சிறிது தூரம் குதிரை வண்டியில் பயணம் செய்து அப்பகுதி மக்களிடம் பிரசாரம் செய்தார். அம்பேத்கார் தெருவில் பைக்கில் சென்று பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டார்.

    அடிவாரம் பகுதியில் ஆதரவற்ற மூதாட்டியிடம் கனிவுடன் பேசினார். அங்கிருந்த திருநங்கைகளிடமும் சிறிது நேரம் பேசி தனக்கு ஓட்டு அளிக்குமாறு கேட்டுக்கொண்டார்.


    திடீரென ஜூஸ் கடைக்குள் புகுந்து பழங்களை பிழிந்து ஜூஸ் போட்டு அனைவருக்கும் கொடுத்தார். நல்லவர்களுக்கே வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டார். தொடர்ந்து வித்தியாசமான முறையில் மன்சூர்அலிகான் பிரசாரம் செய்து வருவது பொதுமக்களை கவர்ந்துள்ளது.  #mansooralikhan

    Next Story
    ×