என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தேர்தலையொட்டி நாளை முதல் 3 நாட்கள் மதுக்கடைகளுக்கு பூட்டு
Byமாலை மலர்15 April 2019 8:03 AM GMT (Updated: 15 April 2019 8:03 AM GMT)
தேர்தலையொட்டி தமிழகம் முழுவதும் நாளை முதல் 3 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடப்படுகிறது. மொத்தம் 7 ஆயிரம் மதுக்கடைகள் மூடப்படுகின்றன. #Loksabhaelections2019 #Tasmac
சென்னை:
பாராளுமன்றம் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு வருகிற 18-ந்தேதி நடைபெறுகிறது.
தேர்தலுக்கு 2 நாட்கள் முன்னதாகவே டாஸ்மாக் மதுக்கடைகளை மூடுவதற்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது.
இப்படி மூடப்படும் மதுக்கடைகளை தேர்தல் முடிந்த பின்னர்தான் 19-ந்தேதிதான் திறக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதன்படி தமிழகம் முழுவதும் நாளை முதல் 3 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடப்படுகிறது. மொத்தம் 7 ஆயிரம் மதுக்கடைகள் மூடப்படுகின்றன.
இதையடுத்து மதுபாட்டில்களை முன்கூட்டியே வாங்கி பதுக்கி வைத்து 3 நாட்களும் கூடுதல் விலைக்கு சிலர் விற்பனை செய்வதற்கும் வாய்ப்பு உள்ளது.
இதனை கண்காணிக்க போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். கடந்த காலங்களில் டாஸ்மாக் கடைகள் விடுமுறையின் போது திருட்டுத்தனமாக மது விற்பனை செய்த பெண்கள் பலரும் சிக்கியுள்ளனர். அவர்களையும் கண்காணிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. #Loksabhaelections2019 #Tasmac
பாராளுமன்றம் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு வருகிற 18-ந்தேதி நடைபெறுகிறது.
தேர்தலுக்கு 2 நாட்கள் முன்னதாகவே டாஸ்மாக் மதுக்கடைகளை மூடுவதற்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது.
இப்படி மூடப்படும் மதுக்கடைகளை தேர்தல் முடிந்த பின்னர்தான் 19-ந்தேதிதான் திறக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதன்படி தமிழகம் முழுவதும் நாளை முதல் 3 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடப்படுகிறது. மொத்தம் 7 ஆயிரம் மதுக்கடைகள் மூடப்படுகின்றன.
இதையடுத்து மதுபாட்டில்களை முன்கூட்டியே வாங்கி பதுக்கி வைத்து 3 நாட்களும் கூடுதல் விலைக்கு சிலர் விற்பனை செய்வதற்கும் வாய்ப்பு உள்ளது.
இதனை கண்காணிக்க போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். கடந்த காலங்களில் டாஸ்மாக் கடைகள் விடுமுறையின் போது திருட்டுத்தனமாக மது விற்பனை செய்த பெண்கள் பலரும் சிக்கியுள்ளனர். அவர்களையும் கண்காணிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. #Loksabhaelections2019 #Tasmac
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X