search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோவில் நிலத்தை பாதுகாக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
    X

    கோவில் நிலத்தை பாதுகாக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

    மதுரை கோதண்டராம சுவாமி கோவில் நிலத்தைச் சுற்றி வேலி அமைத்து பாதுகாப்பு வழங்கும்படி உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. #TempleLandSecurity #HighCourtMaduraiBench
    மதுரை:

    உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ராதாகிருஷ்ணன் என்பவர் ஒரு மனு தாக்கல் செய்தார். அவர் தனது மனுவில், மதுரை ஒத்தக்கடை கோதண்டசுவாமி கோவில் நிலத்தை சுற்றி வேலி அமைத்து பாதுகாப்பு வழங்க உத்தரவிடும்படி வேண்டுகோள் விடுத்திருந்தார்.

    அவரது மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரரின் கோரிக்கையை ஏற்ற நீதிமன்றம், கோவில் நிலத்திற்கு பாதுகாப்பு வழங்கும்படி இடைக்கால உத்தரவு பிறப்பித்தது.

    ‘மதுரை ஒத்தக்கடை கோதண்டராம சுவாமி கோவிலுக்கு சொந்தமான 9.49 ஏக்கர் நிலத்தைச் சுற்றி கம்பி வேலி அமைத்து பாதுகாப்பு வழங்கவேண்டும். கோவில் நிலத்தை பாதுகாக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து இந்து சமய அறநிலையத்துறை மற்றும் காவல்துறை பதிலளிக்க வேண்டும்’ என நீதிமன்றம் உத்தரவிட்டது. அத்துடன் வழக்கு விசாரணையை 2 வாரத்திற்கு ஒத்திவைத்தது. #TempleLandSecurity #HighCourtMaduraiBench

    Next Story
    ×