search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வாக்குச்சாவடிகளை கைப்பற்றினால் தி.மு.க.வினர் வேடிக்கை பார்த்து கொண்டு இருக்கமாட்டார்கள்- திருமாவளவன்
    X

    வாக்குச்சாவடிகளை கைப்பற்றினால் தி.மு.க.வினர் வேடிக்கை பார்த்து கொண்டு இருக்கமாட்டார்கள்- திருமாவளவன்

    வாக்குச்சாவடிகளை எதிர்கட்சியினர் கைப்பற்றினால் தி.மு.க.வினர் வேடிக்கை பார்த்து கொண்டு இருக்க மாட்டார்கள் என்று திருமாவளவன் பேசியுள்ளார். #Thirumavalavan #dmk
    திண்டிவனம்:

    திண்டிவனம் வண்டி மேடு வ.உ.சி திடலில் நடந்த பொதுக்கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளன் பேசினார். அப்போது அவர் கூறியதாவது :-

    தி.மு.க. தலைமையிலான கூட்டணி பரிசுத்தமான கூட்டணி. நம்மை எதிர்க்கும் கூட்டணியானது சீட்டும் நோட்டும் பேரம் பேசி உருவாக்கப்பட்ட கூட்டணி. நமது கூட்டணி மோடியை விரட்டியடிக்க உருவாக்கப்பட்ட கூட்டணி. இந்தியாவில் தமிழகத்தில் மட்டும் தான் காங்கிரஸ் உள்ள மதச்சார்பற்ற கூட்டணியில் இடது சாரிகள் இடம் பெற்றுள்ளனர். கொள்கையுடன் உருவாக்கப்பட்ட கூட்டணி. 
    அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி. வியாபார கூட்டணி.

    தி.மு.க.விற்கு எங்களுக்கும் உள்ள உறவு தேர்தலுக்கு மட்டுமல்ல கொள்கை ரீதியானது. வாக்குசாவடிகளை கைப்பற்றுங்கள் என்று கூறும் தலைவரை பார்க்கின்றீர்கள் வாக்கு சாவடிகள் கைப்பற்றினால் தி.மு.கவினர் வேடிக்கை பார்த்து கொண்டிருக்க மாட்டார்கள். 100 கோடி கொடுத்தால் கூட ஒரு ஓட்டிற்கு ஈடாகாது. ஊழல் செய்து கொள்ளையடித்த பணத்தை கொடுத்தால் வாங்கி கொள்ளுங்கள் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் இந்தியாவின் பெயரை மாற்றுவதே நோக்கம். பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் இந்துக்கள் மட்டுமே இந்தியாவில் வாழ முடியும். வேறு எந்த மாநிலத்தில் இல்லாத வகையில் தமிழகத்தில் மோடிக்கு எதிர்பு அலைவீசுகின்றது. 

    இவ்வாறு அவர் பேசினார்.  #Thirumavalavan #dmk
    Next Story
    ×