search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜிஎஸ்டி வரி - பண மதிப்பிழப்பால் வியாபாரிகள் வாழ்விழந்தனர்- சீமான் பேச்சு
    X

    ஜிஎஸ்டி வரி - பண மதிப்பிழப்பால் வியாபாரிகள் வாழ்விழந்தனர்- சீமான் பேச்சு

    ஜிஎஸ்டி வரி - பண மதிப்பிழப்பால் கோடிக்கணக்கான வியாபாரிகள், வர்த்தகர்கள் வாழ்விழந்து போனார்கள் என்று சீமான் பேசியுள்ளார். #seeman #pmmodi #gst

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கம் அருகில் நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு பேசினார். இந்த தேர்தலை நாம் எப்படி எதிர்கொள்கிறோம். ஒருபக்கம் பா.ஜனதா- அ.தி.மு.க. ஆகியவற்றின் பின்னால் ஒரு அணி. மற்றொரு பக்கம் தி.மு.க.- காங்கிரஸ் கட்சிகளின் பின்னால் ஒரு அணி.

    தமிழ்நாட்டில் ஒரே ஒரு கட்சி பெரிய கட்சி உண்டென்றால் அது நாம் தமிழர் கட்சி மட்டும்தான். தனித்து நிற்கிறது. துணிந்து நிற்கிறது. உண்மையும் நேர்மையும் ஆக மக்களை அணுகுகிறது. மது, பணம், உணவு கொடுக்காமல் தன்னெழுச்சியாக மக்கள் தானாக திரண்டு கூடுகிறார்கள் என்றால் தமிழர் நாட்டிலேயே மிகப்பெரிய கட்சி என்றால் அது நாம் தமிழர் கட்சிதான். இது உண்மையிலேயே மாற்றத்துக்கான எளிய மக்களின் புரட்சி.

    பா.ஜனதா அது ஒரு மதவாத கட்சி என்று மதவாதத்துக்கு எதிரான கூட்டணியான தி.மு.க. கூறுகிறது. இதே தி.மு.க. பா.ஜனதாவுடன் கூட்டணி அமைத்து பதவி அனுபவித்து இருக்கிறது. அப்போது அது மதவாதம் அல்ல மிதவாதம். 5 ஆண்டு காலத்தில் செய்யாததை இந்த பா.ஜனதா அடுத்த ஆட்சி காலத்தில் செய்யப்போகிறதா? பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி. வரியால் மக்கள் கடும் பாதிப்புக்கு ஆளாகி இருக்கிறார்கள். இந்த வரியால் பல கோடிக்கணக்கான வியாபாரிகள், வர்த்தகர்கள் வாழ்விழந்து போனார்கள். இனிப்பு வார்த்தைகளை கூறி ஏமாற்றுகிறார்கள்.

    நாங்கள் ஓட்டுக்காக பேசவில்லை. உங்கள் உரிமைக்காக பேசுகிறோம். இந்த தேர்தலை ஒரு தேர்தலாக பார்க்காமல் ஒரு மாறுதலாக பார்த்து, இந்த தேர்தலில் ஒரு மாற்றத்தை தாருங்கள். உழவை மீட்போம், உலகைக் காப்போம் என்ற முழக்கத்தோடு நாங்கள் தேர்தலை சந்திக்கிறோம். எனவே நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளரை வெற்றி பெறச்செய்யுங்கள் என்று கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு சீமான் பேசினார். #seeman #pmmodi #gst

    Next Story
    ×