என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
ஸ்டாலின் ஆதரவு அலை வீசுவதால் 40 தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி வெற்றிபெறும்- உதயநிதி பிரசாரம்
புளியங்குடி:
புளியங்குடியில் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார். டி.என். புதுக்குடி காமராஜர் சிலை அருகே பேசியதாவது:-
மத்திய-மாநில அரசுகள் தமிழகத்திற்கு செய்த துரோகம் எண்ணிலடங்காதவை. குறிப்பாக நீட் தேர்வை அமல்படுத்தியது, டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டம், தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டத்தில் நடைபெற்ற துப்பாக்கி சூடு, கஜா புயலில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்காதது என பல்வேறு துரோகங்களை தமிழக மக்களுக்கு மத்திய-மாநில அரசுகள் செய்துள்ளது.
இதன் எதிரொலியாக தற்போது இந்தியா முழுவதும் மோடியின் எதிர்ப்பலையும், தமிழகம் முழுவதும் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் ஆதரவு அலையும் வீசுகிறது. இதனால் 40 பாராளுமன்ற தொகுதிகளிலும், 18 சட்டமன்ற இடைத் தேர்தலிலும் தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி பெறும். அதே நேரத்தில் தேர்தல் அறிக்கையின்படி வெற்றி பெற்ற பின் அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவோம்.
விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும், மாணவர்களுக்கும் பல்வேறு திட்டங்களை நிறைவேற்ற காத்திருக்கும் மத்தியில் ஆட்சி அமைக்க உள்ள காங்கிரஸ், அதற்கு உறுதுணையாக உள்ள தி.மு.க. மற்றும் கூட்டணிக் கட்சிகளுக்கும் வாக்காளப் பெருமக்கள் ஆதரவு அளித்து வருகின்றனர். எனவே உங்களுக்கு சேவை செய்திட உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்கும் படி கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார். #udhayanidhi #mkstalin #congress
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்