search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாஜக நிறுவன தினம்- தொண்டர்களுக்கு தமிழிசை சவுந்தரராஜன் வாழ்த்து
    X

    பாஜக நிறுவன தினம்- தொண்டர்களுக்கு தமிழிசை சவுந்தரராஜன் வாழ்த்து

    பா.ஜ.கவின் 39வது ஆண்டு நிறுவன தினத்தையொட்டி, அக்கட்சியின் மாநில தலைவர் தமிழிசை தொண்டர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். #BJPFoundationDay #Tamilisai #Modi
    சென்னை:

    பாஜகவின் 39வது ஆண்டு நிறுவன தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பிரதமர் மோடி, கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷா உள்ளிட்ட தலைவர்கள் கட்சி தொண்டர்களுக்கு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

    அவ்வகையில், பா.ஜ.கவின் 39வது ஆண்டு நிறுவப்பட்ட தினத்தையொட்டி, அக்கட்சியின் தமிழ் மாநில தலைவர் தமிழிசை தொண்டர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். தனது கொள்கைகளிலிருந்து வழுவாமல் உலகின் மிகப் பெரிய ஜனநாயக கட்சியாக, 11 கோடிக்கும் அதிகமான உறுப்பினர்களை பா.ஜ.க கொண்டிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். உலகிற்கே வழிகாட்டியாக மீண்டும் உருவெடுக்க உறுதி ஏற்போம் என பா.ஜ.க தொண்டர்களை தமிழிசை கேட்டுக்கொண்டுள்ளார்.

    சமூகத்திற்கு சேவை செய்வதற்கும், தேசத்தை புதிய உச்சத்திற்கு கொண்டு செல்வதற்காகவும் பாஜக உருவானது என்றும், தற்போது அனைவரும் விரும்பும் கட்சியாக உருவெடுத்திருப்பதாகவும் பிரதமர் மோடி டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

    மோடியின் தலைமையில் புதிய இந்தியாவை உருவாக்க உழைக்கும்படி கட்சியினருக்கு அமித் ஷா அழைப்பு விடுத்துள்ளார். #BJPFoundationDay #Tamilisai #Modi
    Next Story
    ×