search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மு.க.ஸ்டாலினை ஒட்டு மொத்த தமிழக மக்களும் புறக்கணிக்கின்றனர்- பிரேமலதா பேச்சு
    X

    மு.க.ஸ்டாலினை ஒட்டு மொத்த தமிழக மக்களும் புறக்கணிக்கின்றனர்- பிரேமலதா பேச்சு

    குறை சொல்வதில் புகழ் பெற்ற மு.க.ஸ்டாலினை ஒட்டு மொத்த தமிழக மக்களும் புறக்கணிக்கின்றனர் என்று பிரேமலதா பேசியுள்ளார். #premalatha #mkstalin

    புதுக்கோட்டை:

    திருச்சி பாராளுமன்ற தொகுதி தே.மு.தி.க. வேட்பாளரை ஆதரித்து அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா, புதுக்கோட்டை மற்றும் கந்தர்வக்கோட்டை பகுதியில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தி.மு.க., தலைவர் மு.க.ஸ்டாலின் எப்போதும் குறைசொல்வதையே வழக்கமாக கொண்டுள்ளார். அதனால்தான் அவரை ஒட்டுமொத்த தமிழக மக்களும் புறக்கணிக்கின்றனர். அவரை குறை சொல்வதில் புகழ்பெற்ற ஸ்டாலின் என்று அழைப்போம். பிரதமர் வேட்பாளர் மோடிதான் என்று சொல்லி வாக்கு சேகரிக்கிறோம். ஆனால் அந்த கூட்டணியில் பிரதமர் வேட்பாளர் யார் என்று அவர்களால் உறுதியாக கூற முடியுமா?

    சாதிக்பாட்சா கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவர் யார்? என்று மு.க.ஸ்டாலின் சொல்லிவிட்டு கொடநாடு பிரச்சினை குறித்து பேசட்டும். 2011ல் ஜெயலலிதாவும், விஜயகாந்தும் சேர்ந்து அமைத்த அதே கூட்டணி மீண்டும் அமைந்துள்ளது. 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவது உறுதி. அ.தி.மு.க. கூட்டணியை எதிர்த்து போட்டியிடுவோரை டெபாசிட் இழக்க செய்ய வேண்டும். 

    இவ்வாறு அவர் கூறினார். #premalatha #mkstalin

    Next Story
    ×