என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
வருமான வரி அதிகாரிகள்போல் நடித்து வியாபாரி வீட்டில் கொள்ளை - 3 பேர் கைது
அம்பத்தூர்:
கொரட்டூர் வடக்கு மாட வீதியைச் சேர்ந்தவர் சிவபிரகாசம் (63). இவர் தனது வீட்டின் கீழ்தளத்தில் மளிகை கடை நடத்தி வருகிறார். மேல் தளத்தில் குடும்பத்துடன் தங்கியுள்ளார். நேற்று முன்தினம் அங்கு வந்த 5 பேர் வருமான வரித்துறை அதிகாரிகள் என்றும், சோதனை நடத்த வேண்டும் என கூறினர்.
பின்னர் சிவப்பிரகாசம், அவரது மனைவி மற்றும் மகளை வீட்டில் வைத்து பூட்டி ரூ.3 லட்சம் ரொக்கம், ஒரு தங்க சங்கிலி, 5 கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் வீட்டின் பத்திரத்தையும் கொள்ளையடித்து சென்றனர்.
இதுகுறித்து கொரட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரோட்டில் பொருத்திய கண்காணிப்பு கேமிரா மூலம் ஆய்வு செய்தனர். அதில் கொள்ளையர்கள் வந்த கால்டாக்சியின் நம்பர் கண்டுபிடிக்கப்பட்டது.
அதை வைத்து அயப்பாக்கத்தைச் சேர்ந்த முருகன் (30) என்பவனை கைது செய்தனர். அவன் கொடுத்த தகவலின்பேரில் கொரட்டூரைச் சேர்ந்த தீனதயாளன் (30), பட்டினப்பாக்கத்தைச் சேர்ந்த சந்திரகுமார் (28) ஆகிய 2 பேரும் கைது செய்யப்பட்டனர். மேலும் தலைமறைவான 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்