search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை செய்தவர்களை படத்தில் காணலாம்.
    X
    தற்கொலை செய்தவர்களை படத்தில் காணலாம்.

    கொடுத்த கடனை வசூலிக்க முடியாததால் ஒரே குடும்பத்தில் 3 பேர் தற்கொலை

    சேலத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    சேலம்:

    சேலம் குகை ஆறுமுகம் பிள்ளைத்தெருவை சேர்ந்தவர் சிவராமன் (வயது 77). இவரது வீடு இன்று காலை வெகுநேரமாகியும் திறக்காமல் இருந்தது. இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் கதவை தட்டி பார்த்தனர். ஆனாலும் கதவு திறக்கப்படவில்லை.

    இதனால் சந்தேகம் அடைந்த அவர்கள் செவ்வாய்ப்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே அங்கு விரைந்து சென்ற போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.

    அப்போது சிவராமன், அவரது மனைவி புஷ்பா (66), மகன் பாபு (42) ஆகிய 3 பேரும் வி‌ஷம் குடித்த நிலையில் இறந்து கிடந்தனர். இதை பார்த்த உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் கதறி அழுதனர்.

    இந்த தகவல் காட்டுத்தீ போல பரவியதால் ஏராளமானோர் அங்கு திரண்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.

    இதற்கிடையே 3 பேரின் உடலையும் மீட்ட போலீசார் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தியபோது பரபரப்பு தகவல்கள் வெளியானது.

    சிவராமன் ரூ. 5 லட்சத்திற்கும் மேல் அந்த பகுதியை சேர்ந்த சிலருக்கு கடன் கொடுத்துள்ளார். ஆனால் அந்த பணத்தை திருப்பி கேட்டபோது அவர்கள் முறையாக பதில் சொல்லாமல், பணத்தையும் திருப்பி கொடுக்காமல் இழுத்தடித்து வந்தனர்.

    ஏற்கனவே பாபுவுக்கு கண் பார்வை குறைபாடால் 42 வயதாகியும் இதுவரை திருமணம் நடைபெறவில்லை. இதனால் மனம் உடைந்த அவர் கொடுத்த பணத்தையும் வசூலிக்க முடியாததால் குடும்பத்துடன் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்தது தெரிய வந்தது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சிவராமனுக்கு வெங்கடேஷ் என்ற மற்றொரு மகன் உள்ளார். இவர் குகை அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

    ஏற்கனவே கடந்த 2 நாட்களுக்கு முன்பு பூலாவாரி ஆத்துக்காடு பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை செய்த நிலையில் தற்போது சேலத்திலும் 3 பேர் தற்கொலை செய்துள்ள சம்பவத்தால் அந்த பகுதியில் சோகம் நிலவி வருகிறது.
    Next Story
    ×