என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கோதாவரியுடன் காவிரி இணைப்பு என்பது பிரச்சனையை திசை திருப்பும் முயற்சி- பழனிசாமிக்கு பாண்டியன் கண்டனம்
Byமாலை மலர்1 April 2019 10:06 AM GMT (Updated: 1 April 2019 10:06 AM GMT)
கோதாவரியுடன் காவிரி இணைப்பு என்பது பிரச்சனையை திசை திருப்பும் முயற்சி என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு பி.ஆர்.பாண்டியன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மன்னார்குடி:
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் மாநில அளவிலான நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. மாநில தலைவர் புண்ணிய மூர்த்தி தலைமை வகித்தார்.
கூட்டத்தில் பொதுச்செயலாளர் பி.ஆர்.பாண்டியன் கலந்து கொண்டு பேசினார்.
இதன்பிறகு பி.ஆர்.பாண்டியன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
காவிரிக்கு மாற்று காவிரி தான். தற்போது கோதாவரியை காவிரியுடன் இணைப்போம் என்று முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறுகிறார். மத்திய, மாநில அரசுகள் காவிரி பிரச்சனையை திசை திருப்ப முயற்சிப்பதை வன்மையாக கண்டிக்கிறோம்.
கடந்த 2 நாட்களாக காவிரி டெல்டா மாவட்டங்களில் பிரசாரம் செய்து வரும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஹைட்ரோ கார்பன் திட்டம் மற்றும் பெட்ரோலிய ரசாயன மண்டலமாக அறிவித்துள்ளது குறித்தும் தனது நிலையை தெளிவு படுத்தாமல் மூடி மறைக்க முயற்சிப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
டெல்டா மாவட்டங்களில் நெல் கொள்முதல் சீர்குலைந்துள்ளது. நெல் கொள்முதல் நிலையங்களில் நெல்லை பெற்றுக் கொண்டு இரண்டு மாதங்களாகியும் பணம் பட்டுவாடா செய்யாமல் காலம் கடத்தப்படுகிறது. கொள்முதல் செய்யப்பட்ட பல லட்சக்கணக்கான மூட்டைகள் கொள்முதல் நிலையங்களிலேயே தேங்கி மக்கி வருவது வேதனையளிக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் மாநில அளவிலான நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. மாநில தலைவர் புண்ணிய மூர்த்தி தலைமை வகித்தார்.
கூட்டத்தில் பொதுச்செயலாளர் பி.ஆர்.பாண்டியன் கலந்து கொண்டு பேசினார்.
இதன்பிறகு பி.ஆர்.பாண்டியன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
காவிரிக்கு மாற்று காவிரி தான். தற்போது கோதாவரியை காவிரியுடன் இணைப்போம் என்று முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறுகிறார். மத்திய, மாநில அரசுகள் காவிரி பிரச்சனையை திசை திருப்ப முயற்சிப்பதை வன்மையாக கண்டிக்கிறோம்.
கடந்த 2 நாட்களாக காவிரி டெல்டா மாவட்டங்களில் பிரசாரம் செய்து வரும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஹைட்ரோ கார்பன் திட்டம் மற்றும் பெட்ரோலிய ரசாயன மண்டலமாக அறிவித்துள்ளது குறித்தும் தனது நிலையை தெளிவு படுத்தாமல் மூடி மறைக்க முயற்சிப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
டெல்டா மாவட்டங்களில் நெல் கொள்முதல் சீர்குலைந்துள்ளது. நெல் கொள்முதல் நிலையங்களில் நெல்லை பெற்றுக் கொண்டு இரண்டு மாதங்களாகியும் பணம் பட்டுவாடா செய்யாமல் காலம் கடத்தப்படுகிறது. கொள்முதல் செய்யப்பட்ட பல லட்சக்கணக்கான மூட்டைகள் கொள்முதல் நிலையங்களிலேயே தேங்கி மக்கி வருவது வேதனையளிக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X