search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்படும்- முத்தரசன்
    X

    மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்படும்- முத்தரசன்

    புதுடெல்லியிலும், தமிழகத்திலும் விரைவில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார். #CPI #Mutharasan #BJP
    பெரம்பலூர்:

    பெரம்பலூரில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் ஆர்.முத்தரசன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் வீடு, கல்லூரிகளில் தேர்தல் நேரத்தில் வருமான வரித்துறையினர் சோதனை செய்திருப்பதை கம்யூனிஸ்டு கட்சி வன்மையாக கண்டிக்கிறது.

    மத்தியில் ஆளும் பா.ஜ.க. ஆட்சி அதிகாரத்தை தவறான முறையில் பயன்படுத்தி, மாற்றுக்கருத்துகள் கொண்ட கட்சியினரையும், எதிர்கட்சியினரையும் பழிவாங்கி அடக்கி ஆள்கிறது. அ.தி.மு.க. அரசு அதற்கு துணை போகிறது.

    தி.மு.க. கூட்டணி மதசார்பற்ற கூட்டணி ஆகும். இந்துக்களுக்கு எதிரான கூட்டணி அல்ல. பொள்ளாச்சியில் 300 இளம்பெண்களை பாலியல் கொடுமைக்கு ஆளான பாதகச்செயலில் ஆளும் கட்சியினர் ஈடுபட்டுள்ளனர்.

    தூத்துக்குடியில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் அப்பாவிகள் பலியான சம்பவத்தை எடப்பாடி பழனிசாமி அரசு தடுக்கவில்லை. புதுடெல்லியிலும், தமிழகத்திலும் விரைவில் ஆட்சிமாற்றம் ஏற்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். #CPI #Mutharasan #BJP
    Next Story
    ×