என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நெசவுத்தொழிலை பாதுகாக்க அ.தி.மு.க.வை வெற்றி பெறச் செய்யுங்கள்- அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
Byமாலை மலர்30 March 2019 11:48 AM GMT (Updated: 30 March 2019 11:48 AM GMT)
நெசவுத்தொழிலை பாதுகாக்க அ.தி.மு.க.வை வெற்றி பெறச் செய்யுங்கள் என்று பிரசாரத்தின் போது அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார். #LSPolls
ஸ்ரீவில்லிபுத்தூர்:
தென்காசி பாராளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள புதிய தமிழகம் நிறுவனத்தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி போட்டியிடுகிறார்.
அவரை ஆதரித்து ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தேர்தல் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-
தென்காசி தொகுதியில் போட்டியிடும் டாக்டர் கிருஷ்ணசாமியை வெற்றிபெறச் செய்தால் ஸ்ரீவில்லிபுத்தூர் மக்கள் குரல் பாராளுமன்றத்தில் ஒலிக்கும். அனைத்து சமுதாய மக்களின் ஆதரவை பெற்ற டாக்டர் கிருஷ்ணசாமிக்கு வாக்காளர்கள் இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்.
நெசவு தொழிலாளர்களுக்கு கூலி உயர்வு, நெசவு தொழிலில் தற்போதுள்ள நூல் பிரச்சனைகள் குறித்து தமிழக முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளோம்.
தொழிலாளர்களுக்கு விரைவில் கூலி உயர்வு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இது குறித்து நெசவாளர்கள் சங்கங்கள் மூலம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம். நெசவு தொழிலை பாதுகாக்க டாக்டர் கிருஷ்ணசாமியை வெற்றிபெற செய்ய வைத்து பாராளுமன்றத்திற்கு அனுப்பி வையுங்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
தேர்தல் பிரசாரத்தில் அமைச்சர்களுடன் வேட்பாளர் டாக்டர் கிருஷ்ணசாமி, சந்திரபிரபா எம். எல்.ஏ., மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள், கூட்டணி கட்சி நிர்வாகிகள் சென்று வாக்கு சேகரித்தனர்.
தென்காசி பாராளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள புதிய தமிழகம் நிறுவனத்தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி போட்டியிடுகிறார்.
அவரை ஆதரித்து ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தேர்தல் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-
தென்காசி தொகுதியில் போட்டியிடும் டாக்டர் கிருஷ்ணசாமியை வெற்றிபெறச் செய்தால் ஸ்ரீவில்லிபுத்தூர் மக்கள் குரல் பாராளுமன்றத்தில் ஒலிக்கும். அனைத்து சமுதாய மக்களின் ஆதரவை பெற்ற டாக்டர் கிருஷ்ணசாமிக்கு வாக்காளர்கள் இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்.
நெசவு தொழிலாளர்களுக்கு கூலி உயர்வு, நெசவு தொழிலில் தற்போதுள்ள நூல் பிரச்சனைகள் குறித்து தமிழக முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளோம்.
தொழிலாளர்களுக்கு விரைவில் கூலி உயர்வு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இது குறித்து நெசவாளர்கள் சங்கங்கள் மூலம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம். நெசவு தொழிலை பாதுகாக்க டாக்டர் கிருஷ்ணசாமியை வெற்றிபெற செய்ய வைத்து பாராளுமன்றத்திற்கு அனுப்பி வையுங்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
தேர்தல் பிரசாரத்தில் அமைச்சர்களுடன் வேட்பாளர் டாக்டர் கிருஷ்ணசாமி, சந்திரபிரபா எம். எல்.ஏ., மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள், கூட்டணி கட்சி நிர்வாகிகள் சென்று வாக்கு சேகரித்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X