என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
எடப்பாடி பழனிசாமி இதுவரை 15 தொகுதிகளில் பிரசாரம்
Byமாலை மலர்30 March 2019 9:22 AM GMT (Updated: 30 March 2019 9:22 AM GMT)
அ.தி.மு.க.- பா.ஜனதா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இதுவரை 15 தொகுதிகளில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டுள்ளார். #LSPolls #EdappadiPalaniswami
சென்னை:
அ.தி.மு.க.- பா.ஜனதா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்து வருகிறார்.
தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களுக்காக தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் சுற்றுப்பயணம் செய்து பேசுகிறார்.
முதல் - அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த 22-ந்தேதி ஏற்காடு கருமந்துறையில் உள்ள செல்வவிநாயகர் கோவிலில் பூஜை செய்து பிரசாரத்தை தொடங்கினார். தொடர்ந்து தர்மபுரியில் அன்புமணி ராமதாசை ஆதரித்து பேசினார்.
23-ந்தேதி திருவண்ணாமலை, வேலூர் பாராளுமன்ற தொகுதிகளில் பிரசாரம் செய்தார். 25, 26, 27 தேதிகளில் வடசென்னை, மத்திய சென்னை, தென் சென்னை தொகுதிகளில் சூறாவளி பிரசாரம் செய்தார். 28-ந்தேதி ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம், ஆரணி தொகுதிகளில் மக்களை சந்தித்தார். 29-ந்தேதி திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், சிதம்பரம் பாராளுமன்ற தொகுதிகளில் பிரசாரம் செய்தார்.
இன்று நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதிகளில் எடப்பாடி பழனிசாமி பேசுகிறார். இதுவரை 15 தொகுதிகளில் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து தேர்தல் பிரசாரம் செய்திருக்கிறார்.
நாளை (ஞாயிற்றுக்கிழமை) நாகை பாராளுமன்ற தொகுதிகளில் உள்ள பல்வேறு பகுதிகளுக்கு சென்று மக்களை சந்திக்கிறார். தஞ்சை பாராளுமன்ற தொகுதியிலும் பிரசாரம் செய்கிறார். இவை தவிர இடைத்தேர்தல் நடைபெறும் சட்டமன்ற தொகுதிகளிலும் பிரசாரம் செய்து வருகிறார்.
தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் கடந்த 20-ந்தேதி நாகை பாராளுமன்ற தொகுதி திருவாரூரில் பிரசாரத்தை தொடங்கினார். தஞ்சையிலும் பேசினார். 21-ந்தேதி பெரம்பலூர், 22-ல் சேலம், தருமபுரி, 23-ந்தேதி தருமபுரி, திருவண்ணாமலை தொகுதிகளில் பிரசாரம் செய்தார்.
24-ந்தேதி வட சென்னை, 25-ல் காஞ்சிபுரம், திருவள்ளூர் தொகுதிகளிலும், 26-ந் தேதி திண்டுக்கல் தொகுதியிலும், 27-ந்தேதி தேனி தொகுதியிலும் சுற்றுப்பயணம் செய்தார். 28-ந் தேதி மதுரை, விருதுநகர் தொகுதிகளிலும், 29-ந்தேதி சிவகங்கை, ராமநாதபுரம் தொகுதிகளிலும் பிரசாரம் செய்தார். இன்று கிருஷ்ணகிரி பாராளுமன்ற தொகுதியிலும் பிரசாரம் செய்கிறார். இடைத்தேர்தல் நடைபெறும் சட்டமன்ற தொகுதிகளிலும் பிரசாரம் செய்கிறார்.
மு.க.ஸ்டாலின் இன்றுடன் 18 பாராளுமன்ற தொகுதிகளிலும், தேர்தல் நடைபெறும் சட்டமன்ற தொகுதிகளிலும் பிரசாரம் செய்து இருக்கிறார்.
நாளை வேலூர் பாராளுமன்ற தொகுதியில் பிரசாரம் செய்கிறார். தொடர்ந்து மற்ற தொகுதிகளுக்கும் சுற்றுப்பயணம் செய்கிறார். #LSPolls #EdappadiPalaniswami
அ.தி.மு.க.- பா.ஜனதா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்து வருகிறார்.
தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களுக்காக தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் சுற்றுப்பயணம் செய்து பேசுகிறார்.
முதல் - அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த 22-ந்தேதி ஏற்காடு கருமந்துறையில் உள்ள செல்வவிநாயகர் கோவிலில் பூஜை செய்து பிரசாரத்தை தொடங்கினார். தொடர்ந்து தர்மபுரியில் அன்புமணி ராமதாசை ஆதரித்து பேசினார்.
23-ந்தேதி திருவண்ணாமலை, வேலூர் பாராளுமன்ற தொகுதிகளில் பிரசாரம் செய்தார். 25, 26, 27 தேதிகளில் வடசென்னை, மத்திய சென்னை, தென் சென்னை தொகுதிகளில் சூறாவளி பிரசாரம் செய்தார். 28-ந்தேதி ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம், ஆரணி தொகுதிகளில் மக்களை சந்தித்தார். 29-ந்தேதி திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், சிதம்பரம் பாராளுமன்ற தொகுதிகளில் பிரசாரம் செய்தார்.
இன்று நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதிகளில் எடப்பாடி பழனிசாமி பேசுகிறார். இதுவரை 15 தொகுதிகளில் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து தேர்தல் பிரசாரம் செய்திருக்கிறார்.
நாளை (ஞாயிற்றுக்கிழமை) நாகை பாராளுமன்ற தொகுதிகளில் உள்ள பல்வேறு பகுதிகளுக்கு சென்று மக்களை சந்திக்கிறார். தஞ்சை பாராளுமன்ற தொகுதியிலும் பிரசாரம் செய்கிறார். இவை தவிர இடைத்தேர்தல் நடைபெறும் சட்டமன்ற தொகுதிகளிலும் பிரசாரம் செய்து வருகிறார்.
தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் கடந்த 20-ந்தேதி நாகை பாராளுமன்ற தொகுதி திருவாரூரில் பிரசாரத்தை தொடங்கினார். தஞ்சையிலும் பேசினார். 21-ந்தேதி பெரம்பலூர், 22-ல் சேலம், தருமபுரி, 23-ந்தேதி தருமபுரி, திருவண்ணாமலை தொகுதிகளில் பிரசாரம் செய்தார்.
24-ந்தேதி வட சென்னை, 25-ல் காஞ்சிபுரம், திருவள்ளூர் தொகுதிகளிலும், 26-ந் தேதி திண்டுக்கல் தொகுதியிலும், 27-ந்தேதி தேனி தொகுதியிலும் சுற்றுப்பயணம் செய்தார். 28-ந் தேதி மதுரை, விருதுநகர் தொகுதிகளிலும், 29-ந்தேதி சிவகங்கை, ராமநாதபுரம் தொகுதிகளிலும் பிரசாரம் செய்தார். இன்று கிருஷ்ணகிரி பாராளுமன்ற தொகுதியிலும் பிரசாரம் செய்கிறார். இடைத்தேர்தல் நடைபெறும் சட்டமன்ற தொகுதிகளிலும் பிரசாரம் செய்கிறார்.
மு.க.ஸ்டாலின் இன்றுடன் 18 பாராளுமன்ற தொகுதிகளிலும், தேர்தல் நடைபெறும் சட்டமன்ற தொகுதிகளிலும் பிரசாரம் செய்து இருக்கிறார்.
நாளை வேலூர் பாராளுமன்ற தொகுதியில் பிரசாரம் செய்கிறார். தொடர்ந்து மற்ற தொகுதிகளுக்கும் சுற்றுப்பயணம் செய்கிறார். #LSPolls #EdappadiPalaniswami
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X