search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பள்ளிப்பாளையம் அருகே குழவிக்கல்லை தலையில் போட்டு மகனை கொன்ற தந்தை
    X

    பள்ளிப்பாளையம் அருகே குழவிக்கல்லை தலையில் போட்டு மகனை கொன்ற தந்தை

    பள்ளிப்பாளையம் அருகே வீடு தொடர்பான பிரச்சனையில் தந்தை தனது மகனை தீர்த்துக்கட்டிய சம்பவம் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
    பள்ளிப்பாளையம்:

    நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் அருகே உள்ள அலமேடு பகுதியை சேர்ந்தவர் சொக்கலிங்கம் (வயது 65). இவரது மகன் கார்த்தி (28).

    இவர் பள்ளிப்பாளையத்தில் உள்ள ஒரு தனியார் ஆயத்த ஆடை நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.

    இந்த நிலையில் தந்தைக்கும், மகனுக்கும் இடையே தாங்கள் வசித்து வரும் வீடு தொடர்பாக பிரச்சனை இருந்து வந்தது. இது சம்பந்தமாக நேற்று இரவு மீண்டும் தந்தைக்கும், மகனும் இடையே சண்டை ஏற்பட்டது.

    இதனால் கோபம் அடைந்த சொக்கலிங்கம் மகனை இனிமேல் விட்டு வைக்கக்கூடாது, அவரை கொலை செய்து விட முடிவு செய்தார். இதற்காக மகன் வீட்டில், மகன் தூங்கும் நேரத்தை எதிர்ப்பார்த்து காத்திருந்தார்

    இரவு சாப்பாடு முடித்து விட்டு கார்த்தி வீட்டில் படுத்து தூங்கினார். நள்ளிரவு சுமார் 1 மணி அளவில் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த சமயத்தில் சொக்கலிங்கம் வீட்டிலிருந்த குழவிக்கல்லை எடுத்து வந்து கார்த்தியின் தலையில் ஓங்கி போட்டார்.

    இதில் தலை நசுங்கி கார்த்தி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். இதையடுத்து சொக்கலிங்கம் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.

    இது பற்றி அக்கம், பக்கத்தினர் பள்ளிப்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து இன்ஸ்பெக்டர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கார்த்தி உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக பள்ளிப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆஸ்பத்திரியில் அவரது உடலை பார்த்து உறவினர்கள் கதறி அழுதனர்.

    இந்த நிலையில் தலைமறைவாக இருந்த சொக்கலிங்கத்தை போலீசார் பிடித்து இந்த கொலை வீடு தொடர்பாக நடந்ததா? அல்லது வேறு ஏதேனும் பிரச்சனை காரணமாக நடந்ததா? என கேட்டு துருவி, துருவி விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணைக்கு பிறகு தான் முழுவிபரங்களும் தெரியவரும்.

    Next Story
    ×