என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
சென்னை அருகே ஒரே நாளில் 4 பேர் படுகொலை
சென்னை:
சென்னை குளத்தூர் அருகே உள்ள படப்பையை சேர்ந்தவர் பாஸ்கர். 39 வயதான இவர் போலீசாரின் ரவுடிகள் பட்டியலில் இடம்பெற்றிருந்தார். இவர் மணிமங்கலம் அருகே உள்ள ஆரம்பாக்கத்தில் டாஸ்மாக் கடை அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது 4 பேர் கும்பல் பாஸ்கரை வழிமறித்து சரமாரியாக அரிவாளால் வெட்டியது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் பலியானார். இதுபற்றி மணிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரு கிறார்கள்.
கொலையுண்ட பாஸ்கர் சென்னையில் பிரபல ரவுடியாக விளங்கிய பங்க் குமாரின் கூட்டாளி ஆவார். பங்க்குமார் 2006-ம் ஆண்டு போலீசாரின் என்கவுண்டரில் பலியாகி விட்டது குறிப்பிடத்தக்கது.
செங்கல்பட்டை சேர்ந்த சூர்யா என்ற வாலிபர் காதல் பிரச்சினையில் கொலை செய்யப்பட்டார். செங்கல்பட்டு மேலேரிப்பாக்கம் பஜனை கோவில் தெருவை சேர்ந்த இவர், சட்டக்கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
திருமணமான இவர் தனது நண்பர் கார்த்திக்கின் காதல் திருமணத்துக்கு உதவி செய்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த பெண்ணின் உறவினர் சூர்யாவுக்கு மதுவாங்கி கொடுத்து அவரை கொலை செய்துள்ளனர்.
கொலையுண்ட சூர்யாவின் மனைவி காயத்ரி கர்ப்பிணியாக உள்ளார். சூர்யாவை கொலை செய்தவர்களை செங்கல்பட்டு தாலுகா போலீசார் தேடி வருகிறார்கள்.
சிங்கபெருமாள் கோவில் அருகே சுமார் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் பிணமாக கிடப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. மறைமலைநகர் போலீசார் விரைந்து சென்று வாலிபரின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
கொலையுண்ட வாலிபரின் பெயர் முருகன் என்பது தெரியவந்தது. இவர் அதே பகுதியில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.கடந்த 24-ந்தேதி இரவில் இருந்து காணாமல் போயிருந்த முருகனை யாரோ கொலை செய்து வீசியுள்ளனர். கொலைக்கான காரணம் என்ன என்பது தெரியவில்லை.
மேலக்கோட்டையூர் பகுதியில் 22 வயது மதிக்கத்தக்க வாலிபர் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். அவர் யார் என்பது தெரியவில்லை. கொலையாளிகள் யார்? எதற்காக கொலை செய்தார்கள் என்பதுபற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் எல்லைக்குட்பட்ட சென்னையையொட்டிய பகுதிகளில் நடத்துள்ள இந்த 4 கொலை சம்பவங்களும் போலீசார் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்